சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 33 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 23 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். சமூகத்தொற்று ஏற்பட்டவர்களில் நால்வருக்குத் தொடர்பில்லா தொற்று ஏற்பட்டது.
அவர்களில் 19 பேர் கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். 13 பேர் ஏற்கெனவே தனித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள்.
கண்காணிப்பு, பரிசோதனை மூலம் ஆறு பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததை அடுத்து அனைவருக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இங்கு வந்தவர்களில் ஐந்து பேர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் யாருக்கும் நேற்று புதிதாக தொற்று இல்லை.
வெள்ளிக்கிழமை புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 15 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள் என்று அமைச்சு தெரிவித்து இருந்தது. வெள்ளிக் கிழமையும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் யாருக்கும் புதிதாக தொற்று இல்லை.
புதிதாக கெரோனா கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,003 ஆகியது. கொவிட்-19 காரணமாக மொத்தம் 32 பேர் மரணமடைந்து உள்ளனர்.

