பிஎஸ்எல்இ, 'ஓ' நிலை நேரடி வாய்மொழித் தேர்வு நடக்கும்

பிஎஸ்எல்இ, 'ஓ' நிலை நேரடி வாய்மொழித் தேர்வு நடக்கும்

2 mins read
2e64024e-48d6-4ff4-957d-3cfc9f44d4b9
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கின்­றன.

இருந்­தா­லும் இந்த ஆண்டு பிஎஸ்­எல்இ (தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு) மற்­றும் 'ஓ' நிலை நேரடி வாய்­மொ­ழித் தேர்­வு­கள் நடத்­தப்­படும். சிங்­கப்­பூர் தேர்வு, மதிப்­பீட்­டுக் கழ­கம் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது.

பள்­ளிக்­கூ­டங்­களில் மொழிப் பாடங்­க­ளுக்­கான கற்­பித்­தல், கற்­றல் முறை­களை ஒட்டி வாய்­மொ­ழித் தேர்­வு­கள் நேர­டி­யாக நடத்­தப்­ப­டு­வ­தாக தான் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அளித்த பதிலில் இந்­தக் கழ­கம் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இந்த வாய்­மொ­ழித் தேர்­வு­களில் மாண­வர்­கள் நேரடியாகக் கலந்து­கொள்ள வேண்­டும்.

வாய்­மொ­ழித் தேர்வு முறை­யில் மாற்­றம் இடம்­பெற்­றால் மாண­வர்­கள் இணைய ரீதி­யில் தேர்வு அதி­கா­ரி­க­ளு­டன் கலந்து செயல்­ப­ட­வும் நன்கு செயல்­ப­ட­வும் போதிய அள­வுக்­குத் திறம்­பட ஆயத்­த­மாக முடி­யா­மல் போய்­வி­டும் என்று கழ­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் விளக்­கிக் கூறி­னார்.

"வாய்­மொ­ழித் தேர்­வில் தேர்வு அதி­கா­ரி­கள் மாண­வர்­களை நேர­டி­யாக சந்­தித்து உரை­யா­டு­கி­றார்­கள். இத­னால் மாண­வர்­களை அவர்­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்க முடி­யும். மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான ஊக்­கத் தூண்­டு­தலை­யும் அவர்­கள் வழங்க முடி­யும்," என்று பேச்­சா­ளர் மேலும் கூறி­னார்.

இந்­தத் தேர்­வு­கள் மாண­வர்­க­ளுக்­கும் தேர்­வா­ளர்­க­ளுக்­கும் பாது­காப்­பாக நடக்­கும் வகை­யில் பள்­ளிக்­கூ­டங்­க­ளு­டன் சேர்ந்து சமூக இடை­வெ­ளியை உறு­திப்­ப­டுத்­தப்­போ­வ­தாக கழ­கம் குறிப்­பிட்­டது.

மாண­வர்- தேர்­வா­ளர் இரு­வ­ருக்­கும் இடை­யில் கண்­ணா­டித் தடுப்­பு­கள் இருக்­கும். இதர பாது­காப்பு, துப்­பு­ரவு ஏற்­பா­டு­களும் இடம்­பெ­றும்.

கொவிட்- 19 நில­வ­ரத்தை இந்­தக் கழ­கம் தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து தேர்வு ஏற்­பா­டு­களில் மாற்­றம் செய்­ய­வேண்டி இருந்­தால் அது பற்றி அறி­விக்­கும்.

'ஓ' நிலை வாய்­மொ­ழித் தேர்வு அடுத்த மாதம் தொடங்­கு­கிறது. பிஎஸ்­எல்இ வாய்­மொ­ழித் தேர்வு ஆகஸ்ட் 12ல் தொடங்­கு­கிறது.

நடு ஆண்டு ஜிசிஇ 'ஓ' நிலை மற்­றும் 'ஏ' நிலை தாய்­மொ­ழித் தேர்­வு­கள் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளு­டன் திட்­ட­மி­டப்­படி நடக்­கும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்து உள்­ளது. கொரோனா சமூ­கத்­தொற்று கார­ண­மாக மே 19 முதல் இந்த இரண்­டா­வது கல்­விப் பரு­வம் வரை மாண­வர்­கள் வீட்­டில் இருந்தே படிக்­கி­றார்­கள்.

நேரடி வாய்மொழித் தேர்வை பெற்றோர் வரவேற்று உள்ளனர்.

கொவிட்-19 கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த ஆண்டு தேர்வு உண்டு