சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்த்த கழுகு மீன் காெணாளி

சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்த்த கழுகு மீன் காெணாளி

2 mins read
6292346a-0f57-4934-a10a-f3a1339bb615
மே 28ஆம் தேதி பதி வேற்றப்பட்ட காணொளி யில் தென்பட்ட கழுகுமீன். சமூக ஊடகத்தில் இது பலரின் கவனத்தை ஈர்த்தது. படம்: ஃபேஸ்புக் -

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­கில் ஒரு தூண்­டி­லில் சிக்­கிய கழு­கு­ மீன் ஒன்­றைக் காட்­டும் ஒரு காணொளி மே 28 முதல் சமூக ஊட­கத்­தில் பரவி வருகிறது.

மூன்று நிமி­டம் ஓடும் அந்­தக் காணொளி, தூண்­டில் முள்ளில் அந்த மீன் போரா­டு­வ­தை­யும் அதை 10 பேர் பார்ப்­ப­தை­யும் பிறகு அது கரைக்கு இழுக்­கப்­பட்­ட­தை­யும் காட்­டு­கிறது. அது எப்­போது படம் படிக்­கப்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை.

ரேமண்ட் கூ என்ற ஃபேஸ்புக் புழங்கி, மே 28 ஆம்­ தேதி அந்தக் காணொளியைப் பதி­வேற்றி இருக்­கி­றார். நேற்று வரை அதை ஏறத்­தாழ 2,500 பேர் பார்த்­த­னர்.

திரு கூவு­டன் தொடர்­கொண்டு அது பற்றி கேட்­ட­போது, தன் நண்­பர் அந்தக் காணொளி­யை அனுப்­பி­ய­தா­கக் கூறி­னார்.

அந்த மீனுக்­குப் பிறகு என்ன ஆனது என்­பது தனக்­குத் தெரி­யாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

என்­றா­லும் அந்­தத் தூண்­டில் சம்­ப­வம் பிடோக் பட­குத்­து­றை­யில் நிகழ்ந்­தது என்று அவர் உறு­தி­பட கூறி­னார்.

இத­னி­டையே, ஃபேஸ்புக்­கில் கருத்து தெரி­வித்த பல­ரும் அந்த மீன் மீண்­டும் கட­லில் விடப்­பட்டு இருக்­கும் என்று தாங்­கள் நம்புவ தாகக் குறிப்பிட்டனர்.

கழுகு மீன்­கள் பற்றி கருத்து தெரி­வித்த சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கடல் துறை உயி­ரி­யல் வல்­லு­நர் ஹுவாங் டான் வெய், சிங்­கப்­பூ­ரில் மூன்று கழுகு­மீன் சிற்றினங்­கள் உண்டு என்றும் இப்­போது காணொளியில் தெரிந்த மீன் அடிக்­கடி தென்­ப­டக்­கூடிய சிற்றினம் ஒன்றைச் சேர்ந்தது என்­றும் தெரி­வித்­தார்.