கொவிட்-19 தடுப்பூசி: கர்ப்பிணிகள் ஜூன் 4 முதல் பதியலாம்

கொவிட்-19 தடுப்பூசி: கர்ப்பிணிகள் ஜூன் 4 முதல் பதியலாம்

2 mins read
0da5ad50-b7d5-46cb-9f76-42b9524577fe
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் பிரிவில் இடம் பெற்று இருந்தால் கர்ப்பிணிகள் ஜூன் 4ஆம் தேதி முதல் பதியலாம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் கர்ப்­பி­ணி­கள் ஜூன் 4 ஆம்­ தேதி முதல் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளப் பதி­ய­லாம். கர்ப்­பிணி பெண்களு­டன் தீவிர சிகிச்­சை­யில் இருக்­கும் புற்று­நோ­யாளி­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இய­லும் என்று கொவிட்-19 சிறப்­புப் பணிக் குழு நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரி­லும் உலக அள­விலும் அதிக மக்­கள் தடுப்­பூசி போட்­டுக் கொண்டு வருவதை அந்­தக் குழு சுட்­டி­யது.

கொரோனா கிரு­மித்­தொற்றைத் தடுப்­ப­தில் தடுப்­பூசி ஆற்­ற­லு­டன் செயல்­ப­டு­கிறது என்­பது தெரி­ய­வந்து உள்­ள­தா­க­வும் பல அமைச்சு­களை உள்­ள­டக்­கிய அந்­தக் குழு கூறி­யது. உல­கம் முழு­வ­தி­லும் இடம்­பெறும் நில­வ­ரங்­களையும் சாட்­சி­யங்­க­ளை­யும் கொவிட்-19 தடுப்­பூசி வல்­லு­நர்­ககள் குழு அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது.

குறிப்­பிட்ட வய­துள்­ள­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­து­ தொ­டர்­பான வழி­காட்டி நெறிமுறை­களை அது திருத்தி இருக்­கிறது.

தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெரும் பட்­சத்­தில் கர்ப்­பிணிகள் தடுப்­பூசிக்கு ஜூன் 4 முதல் பதி­ய­லாம் என்று குழு அறி­வித்­தது.

இருந்­தா­லும் அவர்­கள் தங்­கள் மருத்துவர்­களை அணுகி தடுப்­பூசி தொடர்­பி­லான சாதகங்களை, பாதகங்­களைத் தெரிந்­து­கொள்ள வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் அனுமதிக்­கப்­பட்டுள்ள ஃபைசர் பயோ­என்­டெக், மொடர்னா ஆகிய இரண்டு தடுப்­பூ­சி­களும் கர்ப்பிணி­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தற்கு ஆதா­ரம் இப்­போது எதுவும் இல்லை என்று குழு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் அவர்­கள் தொடர்­பில் கிடைத்­துள்ள தக­வல்­கள் இன்­ன­மும் கொஞ்­ச­மா­கவே இருக்­கின்­றன என்­பதை அது சுட்­டி­யது.

தாய்ப்­பால் கொடுக்­கும் மாதர்­களும் தடுப்­பூ­சிக்கு போட்­டுக் கொள்­ள­லாம் என்­றும் ஊசி போட்­டுக்­கொண்ட பிறகு அவர்­கள் தாய்ப்­பால் கொடுப்­பதை நிறுத்த வேண்­டாம் என்­றும் அது கூறி­யது.

இத­னி­டையே, தீவிர சிகிச்சை பெற்­று­வ­ரும் புற்­று­நோ­யா­ளி­க­ளும் தடுப்­பூசி போட்­டுக்­கொ­ள்ள முடி­யும், இருந்­தா­லும் மருத்­து­வ­ம­னை­களில்­தான் அவர்­கள் ஊசி போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

அதற்கு முன்­ன­தாக அவர்­களுக்கு ஊசி போட­லாமா என்­பது பற்றி மருத்­து­வர்­கள் முடிவு செய்ய வேண்­டும்.

இப்­போ­தைய வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின்படி ஹார்­மோன் சிகிச்சை பெறுகின்ற புற்­று­நோ­யா­ளி­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம். புற்­று­நோய் கார­ண­மாக தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயா­ளி­கள் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­ வர்­கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 கார­ண­மாக இவர்­களுக்கு ஏற்­ப­ட­கூ­டிய ஆபத்­து­கள் அதி­கம் என்­ப­தைச் சிறப்­புப் பணிக் குழு சுட்­டி­யது.

இதர வகை தடுப்­பூ­சி­கள் பற்­றிய விவ­ரங்­க­ளை­யும் அவை யாருக்­குப் பொருந்­தும் என்­ப­தை­யும் குழு தொடர்ந்து பரி­சீ­லித்­து­வ­ரும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.