60ஐ கடந்த முதியோருக்கு உடனடி தடுப்பூசி ஏற்பாடு பிரதமர் லீ சியன் லூங்: முன்பதிவு தேவையில்லை

60ஐ கடந்த முதியோருக்கு உடனடி தடுப்பூசி ஏற்பாடு பிரதமர் லீ சியன் லூங்: முன்பதிவு தேவையில்லை

2 mins read
2c6a375c-3b8a-49cf-8098-1d8de55c76ba
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

சிங்­கப்­பூ­ரில் 60 வய­தைக் கடந்த முதி­யோர் எந்த ஒரு கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யத்­திற்­கும் சென்று உடனே ஊசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்று பித­ர­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ள­னார்.

இன்­னமும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­யோ­ரு­க்­குச் சிறப்புச் சலு­கை­யாக தான் இதை அறி­விப்­ப­தாக அவர் கூறி­னார்.

அந்த வய­துப் பிரி­வி­ன­ரைப் பொறுத்­த­வரை முன்­ப­திவு தேவை­இல்லை என்­றார் பிர­த­மர்.

"உங்­க­ளுக்கு மேலும் வசதி செய்து தருகிறோம். தடுப்­பூசி நிலை­யத்­திற்கு நேரே போய் உடனே நீங்­கள் ஊசி போட்­டுக்­கொள்­ள­லாம்," என்று பிரதமர் திரு லீ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 நில­வரம் பற்றி பிர­த­மர் நேற்று தொலைக்­காட்­சி­யில் பேசி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி இயக்­கத்தை வேகப்­ப­டுத்துவதற்­கான முயற்­சி­கள் பற்றி அப்­போது அவர் குறிப்­பிட்­டார்.

கொரோனா தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் அடுத்த கட்ட முயற்சிகளை பிர­த­மர் தமது உரை­யில் விவ­ரித்­தார்.

தடுப்­பூ­சிக்கு முதி­ய­வர்­கள் அளித்­து­வ­ரும் ஆத­ரவு சிறப்பாக உள்­ளது என்று அவர் கூறினார்.

சிங்­கப்­பூ­ரில் 60 வய­துக்­கும் மேற்­பட்ட வய­துள்ள 760,000 மூத்த குடி­மக்­களில் ஏறத்­தாழ முக்­கால் வாசிப்­பேர் குறைந்தபட்­சம் ஒரு முறை ஊசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் அல்­லது முன்­ப­திவு செய்­துள்­ள­னர் என்­று திரு லீ தெரிவித்தார்.

இருந்­தா­லும் 280,000 பேர் ஊசி போட்­டுக்­கொள்ள இன்­ன­மும் பதி­ய­வில்லை.

கூடியவிரை­வில் ஊசி போட்டுக்­கொள்­ளும்படி அவர்­களை வலி­யுறுத்­திய திரு லீ, "அதி­ப­ரும் நானும் அமைச்­ச­ரவை சகாக்­கள் அனை­வரும் உங்­கள் வய­துப் பிரிவிலுள்ள பெரும்­பா­லா­ன­வர்­களும் ஏற்கெனவே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ளோம். தடுப்­பூசி பாது­காப்­பானது, அது உங்­களைக் காக்கும்," என்­றார் பிர­த­மர்.

இந்த வய­துப் பிரி­வி­ன­ரில் நட­மாட முடி­யாதவர்­கள், தடுப்­பூசி நிலை­யத்­திற்­குச் செல்ல இய­லா­த­வர்­கள் யாரே­னும் இருந்­தால் வீட்டிற்கு வந்து ஊசி போடு­மாறு அவர்­கள் அதி­கா­ரி­க­ளைக் கேட்­டுக்­கொள்­ள­லாம். ஊசி போட்­டுக்கொள்ள முதி­ய­வர்­களை ஊக்­க­மூட்­டும்­படி அவர்­க­ளின் உற­வி­னர்­களை, நண்­பர்­களைப் பிர­த­மர் கேட்­டுக்­கொண்­டார்.