அமைச்சர் லாரன்ஸ் வோங்: மெத்தனம் கூடாது

அமைச்சர் லாரன்ஸ் வோங்: மெத்தனம் கூடாது

1 mins read
fd2a0898-cc4b-41ee-b82d-d1b3bc34f6bb
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த நடப்­புக்கு வந்­துள்ள கடும் கட்­டுப்­பா­டு­கள் பலன் தரு­கின்­றன.

இருந்­தா­லும் இதில் மெத்­த­னப் போக்­குக்கு இப்­போது இட­மில்லை என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

ஜூன் 13க்குப் பிறகு கட்­டுப்­பா­டு­கள் கொஞ்­சம் தள­ரும் என்­ப­தற்­கான வாய்ப்பு தெரி­கிறது.

என்­றா­லும் தேவை எனில் மேலும் கட்­டு­பா­டு­கள் நடப்­புக்கு வரும் என்­பதை உணர்ந்­து­கொண்டு அதற்கு ஏற்ப மனத்­த­ள­வில் நாம் ஆயத்­த­மாக வேண்­டும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, கொவிட்-19 சூழ்­நிலை தொடர்ந்து நிச்­ச­ய­மில்­லா­த­படியே இருந்து வருகிறது என்று நேற்று கூடிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் தலைவர்­களில் ஒரு­வ­ரான அமைச்சர் திரு வோங் குறிப்பிட்டார்.