தொல்லை தரும் வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம்

தொல்லை தரும் வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம்

2 mins read
1f02030b-03bc-4a3c-b100-fe1917dd62dc
-

தொல்லை தரும் வழக்­கு­களை விசா­ரிக்க புதிய நீதி­மன்­றம் அமைக்கப்பட்டுள்ளது.

தனி­ந­பரின் தனிப்­பட்ட தக­வல்­களை இணை­யத்­தில் வெளி­யி­டு­வது, மிரட்­டும் வகை­யில் நடப்­பது தொடர்­பா­னவை அவற்­றில் அடங்­கும்.

இன்று முதல் அனைத்து குற்­ற­வி­யல் மற்­றும் சிவில் அச்­சு­றுத்­தல் கோரிக்­கை­களை அச்­சு­றுத்­தல் பாது­காப்பு நீதி­மன்­றம் விசா­ரிக்­கும் என்று சட்ட அமைச்­சும் அரசு நீதி­மன்­றங்­களும் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

ஆனால் சிவில் அல்­லது குடும்ப வழக்­கு­க­ளின் கோரிக்கை இங்கு விசா­ரிக்­கப்­ப­டாது என்­றது அறிக்கை. சைனா­ட­வு­னில் உள்ள அரசு நீதி­மன்­றக் கட்ட­டத்­தில் புதிய நீதி­மன்­றம் செயல்­படும்.

பாது­காப்பு உத்­த­ரவு, பொய்த் தகவல் தொடர்­பான உத்­த­ரவு உள்­ளிட்ட விண்­ணப்­பங்­கள் எளிய முறை­யில் விசா­ரணை நடத்­தப்­படும்.

ஆனால் ஒரு­வர் மட்­டுமே கோரிக்கை விடுப்­ப­வ­ரா­க­வும் இருக்க வேண்­டும் என்ற நிபந்­தனை உள்ளது.

அரசு நீதி­மன்ற இணை­யம் வழி­யாக வழக்­கு­க­ளுக்­கான மனுக் களைச் சமர்ப்­பிக்­க­லாம்.

நீதி­மன்­றத்­துக்கு வரா­மலே இணை­யம் வழி­யாக சர்ச்­சை­யைத் தீர்த்­துக்கொள்­ளும் வச­தி­யும் செய்­யப்­பட்­டுள்­ளது.

புதிய நீதி­மன்­றம், வழக்­கு­களை உட­ன­டி­யாக விசா­ரிப்பதால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மனு சமர்ப்­பிக்­கப்­பட்ட 48 முதல் 72 மணி நேரத்­தில் வழக்கை விசா­ரிக்க புதிய நீதி­மன்றம் இலக்கு நிர்­ண­யித்­துள்ள­து.

ஆபத்­தான வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளாக இருந்­தால் 24 மணி நேரத்­திற்­குள் விசா­ரிக்­கப்­ப­ட­வும் வாய்ப்பு உள்­ளது.

தனிநபர் பாது­காப்பு உத்­த­ரவு தொடர்பான மனுக்கள் சமர்­பிக்­கப்­பட்ட 24 மணி நேரத்­தில் விசா­ரிக்­க­வும் புதிய நீதி­மன்­றம் திட்­ட­மிட்­டுள்­ளது.

தொல்லை தொடர்­பான வழக்­கு­கள் புதிய நீதி­மன்­றம், மாவட்ட, மாஜிஸ்­டி­ரேட் நீதி­மன்­றங்­க­ளுக்கு இடையே இன்று முதல் மாற்­றப்­ப­ட­லாம்.

புதிய நீதி­மன்­றம், குடும்ப நீதி­மன்­றத்­துக்கு இடையே மாற்­றப்­படும் இத்­த­கைய வழக்­கு­கள் பின்­னர் விசா­ரிக்­கப்­படும் என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்கை தெரி­வித்­தது.