5,000க்கும் மேற்பட்ட தொலைபேசி
எண்களை தடுத்த கைபேசி செயலி
சந்தேகமான தொலைபேசி அழைப்புகளை தடுத்து நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 'ஸ்கேம்ஷீல்ட்' எனும் செயலி 5,500 தொலைபேசி எண்களிலிலிருந்து வரும் அழைப்புகளை தடுத்து நிறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அறிமுகமான இந்தச் செயலியை இதுவரை 119,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை தேசிய குற்றத்தடுப்பு மன்றமும் சிங்கப்பூர் போலிஸ் படையும் நிர்வகித்து வருகின்றன. ஆனால் இந்தச் செயலி தற்போது ஐபோனுக்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்ட் கைபேசி களுக்கான செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
முதலாளிகளின் கையில்
பணிப்பெண்களின் கடப்பிதழ்
சில முதலாளிகள் சட்டவிரோதமாக பணிப்பெண்களின் கடப்பிதழ்களையும் வொர்க் பர்மிட்டுகளையும் வாங்கி வைத்திருப்பது திடீர் சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதத்திலிருந்து ஏறக்குறைய 200 சோதனைகளை மனிதவள அமைச்சு நடத்தியுள்ளது.
பணிப்பெண்களை நேரிடையாகச் சந்திப்பது உள்ளிட்ட அமைச்சின் புதிய சோதனை நடவடிக்கைகள் அவர்களுக்கு தகுந்த வாழ்விடங்களையும் வேலையிடங்களையும் உறுதி செய்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் இல்லப் பணிப்பெண், வெளிநாட்டு ஊழியர் நல அமைப்புகள் தெரிவித்தன.
"இல்லப்பெண்களை அதிகாரிகள் நேரில் சந்திப்பதற்கு முதலாளிகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.
ரகசிய கோப்புகள் கசிவு;
போலிசில் மதரஸா புகார்
அங்கீகரிக்கப்படாத அன்னியர்களிடம் ரகசிய கோப்புகள் கசிந்துள்ளதை அறிந்த இஸ்லாமிய சமய பள்ளியான மதரஸா இர்ஷாத் ஸூரி அல்-இஸ்லாமியா போலிசிடம் புகார் அளித்துள்ளது என்று முயிஸ் எனப்படும் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தோ பாயோவில் அமைந்துள்ள முயிஸுக்கும் மதரஸா இர்ஷாதுக்கும் இம்மாதம் 11ஆம் தேதி தெரிய வந்ததாக நேற்று மன்றம் தெரி வித்தது.
அந்த மதரஸா பள்ளி தான் நடத்திய விசாரணையில் மதரஸாவின் ஊழியர் பல ரகசிய ஆவணங்களை பள்ளியின் மின்னஞ்சல் காப்பகத்திலிருந்து அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தெரியவந்துள்ளது.
"ஊழியருடன் நடத்தப்பட்ட நேர்காணலிற்குப் பின்னர் சட்டவிரோதமாக மதரஸாவின் ரகசிய ஆவணங்களை வேறொருவருக்கு அனுப்பிவைத்ததாக போலிசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்று முயிஸ் தெரிவித்தது.
"உடனடியாக அந்த ஊழியர் மதரஸா பணியிலிருந்து விலகியதாகவும் போலிஸ் விசாரணை நடந்து வருவதால் வேறு எந்தத் தகவலையும் பள்ளி தற்போது வழங்க இயலாது என்றும் முயிஸ் தெரிவித்தது.
மதரஸாவின் நிதி பரிவர்த்தனைகளின் மறுஆய்வு தொடர்பில் அந்த ஆவணங்கள் திருடப்பட்டன என்றும் கூறப்பட்டது.

