சிங்கப்பூரில் தகுதி அடிப்படை
யிலான அணுகுமுறை என்பது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒன்று என்றும் இதிலிருந்து தவறிவிடக்கூடாது என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
இதனால் தகுதி அடிப்படை என்பதை பரந்த, விரிந்த நோக்கில் பார்க்க வேண்டும் என்றும் அதை ஒரு முறை வரும் தேர்வு அடிப்
படையில் முடிவு செய்ய முடியாது என்றும் அமைச்சர் சான் தெரிவித்தார்.
நேற்று கிட்டத்தட்ட 10,000 கல்வியாளர்கள் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் 'எக்சல் ஃபெஸ்ட்' என்ற மெய்நிகர் ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர், "பலர் தங்கள் வாழ்வின் வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு சிறப்புத் திறன்களைப் பெறுகின்றனர்.
"பலர் பல வழிகளில் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் கூட மெத்தனமாக இருக்கலாகாது," என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூர் அனைவரையும் உள் ளடக்கிய நாடாக இருக்க, வசதி உடையோர் வசதி குறைந்தோருக்கு உதவக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மூன்று நாட்களாக நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வித் துறையில் ஆக அண்மைய போக்குகள், புத்தாக்க முயற்சிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளின் சாதனைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டன.
சிக்கலான உலகில் வருங்கால சந்ததியினர் எதிர்நோக்கும் காலகட்டத்தில் முக்கியமான பண்பு
நெறிகள் குறித்த முக்கியத்
துவத்தை ஆசிரியர்களுக்கு திரு சான் வலியுறுத்தினார்.
அதில் ஒன்றுதான் தகுதி அடிப்படையிலான அணுகுமுறை என்று விளக்கிய திரு சான், சிங்கப்பூரர்கள் திறந்த மனப்பான்மையுடனும் அனைவரையும் உள்ளடக்கிச் செல்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். அத்துடன் சிங்கப்பூரர்கள் நம்பகமான, கொள்கைப் பிடிப்புடைய மக்களாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
நான்கு மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஒரு நாடு எப்பொழுதும் சிறந்த யோசனைகளை கொண்டிருப்பது இயலாமல் போகலாம். ஆனால், நாம் உலகத்துடன் தொடர்பில் இருக்கும் பட்சத்தில் நாம் சிறந்து விளங்க முடியும்.
"உலகத்துடன் தொடர்பில் இருப்பது என்பது, ஒரு மாற்று வழித் தேர்வு அல்ல, அது நாம் உயிர்வாழ்வதற்கான உத்தி," என்று திரு சான் கூறினார்.
கல்வி அமைச்சின் ஆசிரியர் மாநாட்டில் சான் சுன் சிங் உரை

