திருட்டுத்தனமான காய்கறி இறக்குமதிக்கு அபராதம்

1 mins read
49bdf057-7662-4640-bb09-c7eba90568d9
-

சுங்­கத் தீர்வை செலுத்­தா­மல் கள்­ளத்­த­ன­மாக இங்கு 63 கிலோ­கி­ராம் காய்­க­றியை இறக்­கு­மதி செய்தி காய்­கறி வர்த்­த­க­ருக்கு 4,500 வெள்ளி அர­பா­தம் விதிக்­கப்­பட்­டி­ருக்­கிறது. சிங்­கப்­பூர் உணவு அமைப்பு நேற்று அத­னைத் தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் லியாவ் இயோ சியாப் எனும் நபர் இறக்­கு­மதி செய்த பொருட்­களில் 63 கிலோ­கி­ராம் காய்­க­றி­கள் இருந்­ததை சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

இயோ சியாப் சந்­தைக் காய்­கறி விநி­யோக நிறு­வ­னத்­தின் உரி­மம் பெற்­ற­வர் அவர்.

கள்­ளக் காய்­க­றி­களை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­து­விட்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் காய்­கறி இறக்­கு­மதி செய்­ப­வர்­கள் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடக்­க­வேண்­டும். காய்­கறி இறக்­கு­மதி செய்­வ­தற்கு உரி­மம் பெறு­வ­தும் ஒவ்­வொரு சரக்­கைப் பற்­றிய முழு விவ­ரம் அளிப்­ப­தும் அவற்­றில் அடங்­கும்.

"சட்ட விரோ­த­மாக இறக்­கு­மதி செய்­யும் காய்­க­றி­கள் எங்­கி­ருந்து பெறப்­ப­டு­கின்­றன என்­பது தெரி­யாது. அத­னால் அவை உண­வுப் பாது­காப்­புக்கு அபா­யத்தை ஏற்­ப­டுத்­த­லாம்," என்­பது அமைப்பு.

அதிக அளவு பூச்­சிக்­கொல்லி மருந்து உள்ள காய்­க­றி­களை அடிக்­கடி சாப்­பிட்­டால், உடல்­ந­லக் கேடு ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் அமைப்பு கூறி­யது.