தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்கள் பாவாடைக்குள் காணொளி: மீண்டும் குற்றம் புரிந்த ஆடவருக்குச் சிறை

1 mins read
2b204bb2-97da-4949-a43d-139478bca896
-

பல பெண்­க­ளைக் குறி­வைத்து தன் கைபே­சி­யைக் கொண்டு அவர்­களின் பாவா­டைக்­குள் பட­மெ­டுத்த கெல்­மென் வோங் இயூ ஹுய் என்­ப­வ­ருக்கு 2019ஆம் ஆண்­டில் 12 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆனால், மறு­ப­டி­யும் அதே குற்­றத்தை 24 வயது வோங் சென்ற ஆண்டு புரிந்­ததை அடுத்து நேற்று 16 வாரச் சிறைத் தண்­டனை அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டது.

வோங் சென்ற ஆண்டு மார்ச் 11ஆம் தேதி­யன்று காலை 7.45 மணி­ய­ள­வில் 'ச்சை­னீஸ் கார்­டன்' எம்­ஆர்டி நிலை­யத்­தில் இருந்த சம­யம், அங்கு பள்­ளிச் சீரு­டை­யில் இருந்த 13 வயது சிறு­மி­யைக் கண்­ட­தா­க­வும் மின்­ப­டி­களில் சென்ற சிறுமி­யின் பின்­னால் நின்­ற­வாறு அவர் பாவா­டைக்­குள் பட­மெ­டுத்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இச்­சம்­ப­வம் குறித்து மறு­நாள் காலை நிலைய அதி­காரி அமாட் கஸா­லிக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது.

மீண்­டும் அன்று காலை 7.45 மணி­ய­ள­வில் எம்­ஆர்டி நிலை­யத்­தைக் கண்­கா­ணித்த திரு அமாட், 27 வயது மாது பின்­னால் நின்­ற­வாறு வோங் பட­மெ­டுப்­ப­தைப் பார்த்து­விட்­டார். அதை­ய­டுத்து போலி­சா­ருக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்டு வோங் கைதா­னார்.

தம் கட்­சிக்­கா­ர­ருக்கு பாலி­யல் ரீதி­யான மன­ந­லப் பிரச்­சினை இருப்­ப­தாக தற்­காப்பு வழக்­க­றி­ஞர் கூறி­யி­ருந்­த­தோடு மன­ந­லக் கழ­கத்­திற்கு வோங் ஜூலை 23ஆம் தேதி­யன்று தன் அடுத்த பரி­சோ­த­னைக்­குச் செல்­ல­வேண்­டும் என்­றார்.