தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

1 mins read
64777a82-f2e0-4fa7-a09b-07beb968011f
-

கர்ப்­பி­ணி­களும் தாய்ப்­பால் கொடுக்­கும் அன்­னை­ய­ரும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வேண்­டும்.

அந்த ஊசி அவர்­க­ளை­யும் அவர்­க­ளின் குழந்­தை­க­ளை­யும் கொரோனா தொற்­றில் இருந்து பாது­காக்­கும் என்று இங்­குள்ள வல்­லு­நர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

உரு­மா­றிய புதிய கிருமி பாதிப்பை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

இங்கு சமூ­கத் தொற்­றும் கூடி­வரு­கிறது. இந்த நிலை­யில், கர்ப்­பி­ணி­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது அவ­சி­ய­மா­ன­தாக ஆகி இருக்­கிறது. தொற்று ஏற்­படும் பட்­சத்­தில் மற்றப் பெண்­களை­விட கர்ப்­பி­ணி­களுக்­குப் பிரச்­சி­னை­கள் அதி­கம் என்று அவர்­கள் குறிப்­பட்­ட­னர்.

தடுப்­பூசி குழந்­தை­யைப் பாது­காக்­கும் என்று சிங்­கப்­பூர் மகப்­பேறு மருத்­து­வர்­கள் கல்­லூரி, மகப்­பேறு மருத்­து­வர்­கள் சங்­கம் இரண்­டும் தெரி­வித்­தன.

கொவிட்-19 தொற்­றுக்கு ஆளாகக்கூடிய கர்ப்­பி­ணி­களுக்குத் தீவிர கண்­கா­ணிப்பு அல்­லது செயற்கை சுவாச சிகிச்சை தேவைப்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பு­கள் அதி­கம் என்­பது மற்ற நாடு­களில் நடந்­துள்ள சோத­னை­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக இந்­தச் சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் லிம் மின் யு தெரி­வித்­தார்.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது குறைப் பிரசவம் ஏற்பட்டு குழந்தைக்கும் தீவிர கண்காணிப்பு சிகிச்சை ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு. கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணம் என்று டாக்டர் லிம் கூறினார்.

தாய்ப்பாலில் தடுப்பூசி மருந்து கலக்காது என்பதால் தாய்ப்பால் கொடுக்கும் மாதர்களுக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி பாது காப்பானது என்று இந்த இரண்டு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.