சீன ஆடவர் ஒருவர், தம்மிடமும் தனது காதலியிடமும் இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த காணொளியை வெளியிட்டவர், சிங்கப்பூரில் இனவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் திரு டேவ் பர்காஷ் வெளியிட்ட காெணாளி ஞாயிறு காலை வரை 16,000க்கும் மேற்பட்ட முறை பகிர்ந்துகொள்ளப் பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறி யுள்ளார்.
சிங்கப்பூரரான சீன ஆடவர் ஒருவர், சீனப்பெண்களையே குறிவைத்து ஈர்ப்பதாகவும் மற்ற இனவாதக் கருத்துகளையும் அவரிடம் கூறியிருந்தார்.
இதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் ெதரிவித்திருந்தனர். சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் முகத்துக்கு நேராக இனவாதக் கருத்துகளை கூறுவது ஏற்க முடியாது என்று சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு பர்காஷ், 26, அந்தச் சம்பவம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் வலைப்பதிவாளர்கள் தனக்கு அளித்த ஆதரவால் மனநிறைவு அடைந்துள்ளதாகக் கூறினார்.
தனது சார்பில் சிலர் போலிசில் புகார் அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த அறுபது வயது ஆடவரிடம் விசாரணை நடந்து வருவதாக ஞாயிறு அன்று போலிசார் கூறியிருந்தனர்.
சீன ஆடவர், பலதுறைத் தொழிற்கல்லூரி ஒன்றின் விரிவுரையாளர் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் பர்காஷ், மக்களும் சுற்றுப்புறமும் மாறி வரும் நவீன உலகில் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்பும் காதலியுடன் சென்றபோது அவர் இனவாதச் சம்பவங்களை சந்தித்துள்ளார்.
திரு பர்காஷ், இந்திய-பிலிப்பினோ கலப்பினத்தவர். அவரது காதலி பாதி சிங்கப்பூர் சீனர், பாதி தாய்லாந்து இனத்தவர்.
"இந்தச்சம்பவத்தின் மூலம் 'சிங்கப்பூரர்' என்பதற்கு அர்த்தம் தெரிய வரும். உயர்ந்த இனம் என்பது இல்லை என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும். நாமே மற்ற இனத்தவர்களை குறைவாக மதிப்பிடக்கூடாது. நாம் பல இன சமுதாயத்தில் வாழ்கிறோம்," என்று பர்காஷ் மேலும் தெரிவித்து உள்ளார்.