தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3,200 சட்டவிரோத சுகாதாரப் பொருட்பட்டியல்கள் மின்வணிகத் தளங்களில் இருந்து அகற்றப்பட்டன

1 mins read
97dc7c4a-e8b9-4e2e-bcc4-d5ad09ef206c
-

சட்­ட­வி­ரோத சுகா­தா­ரப் பொருள்­கள் தொடர்­பான 3,200க்கும் அதிக­மான பட்­டி­யல்­களை உள்­ளூர் மின்­வ­ணி­கத் தளங்­களில் இருந்து அதி­கா­ரி­கள் அகற்­றி­னர்.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் இருந்து மே வரை அந்­தப் பொருட்­பட்­டி­யல் அகற்­றப்­பட்­ட­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் ஓர் அறிக்கை வழி­யாக நேற்று தெரி­வித்­தது.

அவ்­வாறு அகற்­றப்­பட்ட பட்­டி­யல்­களில், உயர் ரத்த அழுத்த, நீரி­ழிவு போன்ற நாட்­பட்ட உடல்­நலப் பிரச்­சி­னை­கள், கொழுப்­பைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குப் பரிந்­துரைக்­கப்­பட்ட மருந்­து­களும் அடங்­கும்.

"அவை பெரும்­பா­லும் தனிப்­பட்ட ஒரு­வ­ருக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட மருந்­தில் மிஞ்­சி­யவை அல்­லது பயன்­ப­டுத்­தப்­ப­டா­தவை. மருத்­து­வர்­க­ளால் மட்­டுமே அவற்­றைப் பரிந்­து­ரைக்க முடி­யும் என்ற தக­வலைத் தாங்­கள் அறிந்­தி­ருக்­க­வில்லை என்று அவற்­றின் விற்­பனை­யா­ளர்­கள் கூறி­னர்," என்று ஆணை­யம் விளக்­கி­யது. பெரும்­பான்­மை­யோர் முதன்­முறை விற்­பனை­யா­ளர்­கள் என்­றும் அது குறிப்­பிட்­டது.

விற்­ப­னை­யா­ளர்­கள் எச்­ச­ரிக்­கப்­பட்­ட­து­டன், ஒழுங்­கு­முறை விதி­களுக்கு இணங்கி நடக்­கு­மா­றும் நினை­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

சுகா­தா­ரப் பொருள்­களை இணை­யம் வழி­யாக வாங்­கும்­போது கவ­ன­மாக இருக்­கு­மா­றும் பெயர்­பெற்ற சில்­லறை விற்­பனை இணை­யத்­த­ளங்­கள் வழி­யாக மட்­டும் வாங்கு­மா­றும் ஆணை­யம் பொது­மக்­களை வலி­யு­றுத்தி இருக்­கிறது.

சட்­ட­வி­ரோத, போலி அல்­லது சந்தேகத்திற்குரிய சுகா­தா­ரப் பொருள்­கள் குறித்து 6866-3485 என்ற எண் அல்­லது hsa_is@hsa.gov.sg எனும் மின்­னஞ்­சல் மூலம் ஆணை­யத்­தின் அம­லாக்­கப் பிரி­விடம் தகவல் தெரிவிக்கலாம்.