சட்டவிரோத குதிரைப் பந்தய சூதாட்டத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 158 பேர் விசாரிக்கப்படுகின்றனர். 36க்கும் 83க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவியல் புலனாய்வுப் பிரிவும் போலிசின் ஏழு தரைப் பிரிவுகளும் ஏப்ரல் 24 தேதிக்கும் ஜூன் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோதக் குதிரைப் பந்தய சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொண்டன.
தெலுக் பிளாங்கா கிரசெண்ட், புக்கிட் மேரா வியூ, சிராங்கூன் சென்ட்ரல், பிடோக், புக்கிட் பாத்தோக், உட்லண்ட்ஸ், மார்சிலிங், ஈசூன் உள்ளிட்ட வட்டாரங்களில் நடைபெற்ற நாடாளவிய அதிரடி சோதனை நடவடிக்கையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரிகளும் உதவினர் என்று போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சோதனையில் $76,000க்கும் அதிகமான ரொக்கம், கைபேசிகள், சூதாட்ட ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று போலிஸ் கூறியது.
இதன் தொடர்பில் 147 ஆடவர்களும் 11 பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வகையான சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளும் கடுமையாகக் கருதப்படும் என்றும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் கூறியது.