சிரியா ெசன்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேரத் திட்டமிட்ட 34 வயது இல்லத்தரசியும் முன்னாள் சமய போதகரான அவரது கணவரும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ருக்காயா ராம்லி என்ற 34 வயது நிரம்பிய இல்லத்தரசி அவரது கணவரால் தீவிரவாத சிந்தனைப் போக்கை மேற்கொண்டார். இதில் அவரது கணவரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ருக்காயாவின் கணவர் கைது செய்யப்பட்டபின் ருக்காயாவிற்கு சமய அறிவுரை போதனை இடம்பெற்றது. ஆனால், அவர் தாம் கொண்டிருந்த தீவிரவாத மனப்போக்கைக் கைவிட மறுத்தார்.
இவரின் கணவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட பின்பு ருக்காயாவிற்கு எதிராக கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் ருக்காயா இவ்வாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
"எனினும், அவருக்கு எதிராக கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்ட பின் அவரது தீவிரவாத நடத்தை மோசமடைந்தது. அத்துடன், சிங்கப்பூரின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்தன.
"ருக்காயாவை சீர்படுத்த அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்புளில் பங்கேற்க அவர் முயற்சி செய்யாமல் அவர் தனது தீவிரவாத நம்பிக்கைகளிலேயே வேரூன்றி இருக்கிறார்.
"அத்துடன், அவர் ஐஎஸ் அமைப்பின் வன்முறைச் செயல்
களுக்கு ஆதரவளிப்பதுடன் இஸ்லாம் சமயத்துக்கு எதிரிகள் என அவர் நினைப்பவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவது ஏற்புடைய செயல் எனக் கருதுகிறார்," என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியுள்ளது.
ருக்காயாவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு ஆணையின்படி, அவர் தனது வசிப்பிடத்தையோ வேலையிடத்தையோ மாற்றக்
கூடாது. மேலும், அவர் முன் அனு
மதியின்றி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக்கூடாது.
அத்துடன், அனுமதியின்றி அவர் பொதுவில் அறிக்கைகள் விடுவது அல்லது அமைப்புகளில் சேருவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
இதற்கு மாறாக, ருக்காயா தமது கணவரின் சகாக்களும் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களுமான நபர்களுடனும் இணையம்வழி தொடர்பில் இருந்தார்.
"அவர் தனது தீவிரவாத வன்முறைப் பாதையில் தொடராமல் இருக்க அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்," என்று உள்
நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ருக்காயாவின் கணவரும் மலேசியாவை சேர்ந்தவருமான ஃபிர்துஸ் கமால் இந்த்சாம் சிங்கப்பூரில் துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார். இவர் பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அவர் 2016ஆம் ஆண்டு தீவிரவாத போக்கை கொண்டிருந்தது தெரியவந்தது.