இருவருக்கு சமூக அளவில் கொவிட்-19 பாதிப்பு; ஒருவர் மரணம்

இருவருக்கு சமூக அளவில் கொவிட்-19 பாதிப்பு; ஒருவர் மரணம்

2 mins read
32d3c2de-ca3c-4a7e-bcc5-6c99d2280c4c
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி மேலும் நால்­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இதன் மூலம் சிங்­க­ப்­பூ­ரில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 62,223ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சமூக அள­வில் இரு­வர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த பிப்­ர­வரி மாதம் 23ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆகக் குறை­வான சமூக அள­வி­லான பாதிப்பு.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ருக்­கு ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ருக்­கும் தொடர்பு இல்லை. மற்­றொ­ரு­வர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர். அவர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்கு­ வி­டு­தி­களில் புதி­தாக யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த இரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அமைச்சு கூறி­யது. சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ளுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. இரு­வ­ரும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்பிய சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள்.

இதற்­கி­டையே, டான் டோக் செங் கொவிட்-19 கிரு­மித்­தொற்று குழு­மத்­தைச் சேர்ந்த 86 வயது சிங்­கப்­பூர் மூதாட்டி கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று உயி­ரி­ழந்­தார். இதன்­மூ­லம் கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் மாண்­டோர் எண்­ணிக்கை 34ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அந்த மூதாட்டி வேறு ஒரு நோய் கார­ண­மாக கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவ­ரது கண­வர் கடந்த ஏப்­ரல் மாதம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து 22ஆம் தேதி வரை டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் 9D வார்­டில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்.

மாண்ட மூதாட்டி ஏற்­கெ­னவே நீரி­ழிவு நோய், உயர் ரத்­தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்­தம் முத­லி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அமைச்சு தெரி­வித்­தது. அவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது கடந்த ஏப்­ரல் மாதம் 30ஆம் தேதி­யன்று உறுதி செய்­யப்­பட்­டது. மாண்ட மூதாட்­டி­யின் குடும்­பத்­துக்­குத் தேவை­யான உத­வியை கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை செய்­து­ வ­ரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இதுவே டான் டோக் செங் கொவிட்-19 குழு­மத்­து­டன் தொடர்­பான மூன்­றா­வது உயி­ரி­ழப்பு. இதற்கு முன்பு மே 1ஆம் தேதி­யன்று 88 வயது சிங்­கப்­பூர் மூதாட்டி ஒரு­வ­ரும் மே 20ஆம் தேதி­யன்று 70 வயது சிங்­கப்­பூர் ஆட­வ­ரும் மாண்­ட­னர்.

கடந்த 28 நாட்­க­ளாக புதி­தாக யாருக்­கும் கொவிட்-19 பாதிப்பு ஏற்­ப­டா­த­தால் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பு இல்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.