இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணம் தற்காலிகமாக
நிறுத்திவைக்கப்படும் என்று நிதித் தொழில்நுட்ப நிறுவனமான 'ரெவொலுட்' அறிவித்துள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் உலகெங்கும் பலர் பாதிப்
படைந்துள்ளதாகவும் சிங்கப்பூரில் வேலை செய்யும் தங்கள் குடும்ப உறுப்பினர் அனுப்பி வைக்கும் பணத்தை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இந்தக் கட்டண நீக்கம் பேருதவியாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறியது.
இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணத்தை ரெவொலுட் நிறுவனம் கடந்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து நிறுத்திவைத்துள்ளது. கட்டண நீக்கம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

