ஆஸ்திரேலியப் பிரதமர் இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்திக்கிறார்.
இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் கலந்துரையாட இருப்பதாக வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இஸ்தானாவில் நடைபெறும்.
சந்திப்பை அடுத்து, இருவரும் இணைந்து மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுவர் என்று அமைச்சு கூறியது.
பிரதமர் லீயும் ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசனும் நேரடியாகச் சந்தித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்
திட்டத்தின்கீழ் இருநாட்டுப் பிரதமர்களும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடியாகச் சந்தித்துக்கொள்வது வழக்கம்.
ஆனால் கொவிட்-19
நெருக்கடிநிலை காரணமாக
இந்தச் சந்திப்பு கடந்த ஆண்டில் இணையம் வழி நடத்தப்பட்டது.
கொரோனா சூழல் பற்றியும் இருநாட்டுத் தலைவர்கள் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

