அமெரிக்க நோய் பரவல், தடுப்பு மையம் பரிந்துரை
உலகின் 110 நாடுகளுக்கு எதிரான பயணக் கட்டுபாடுகளைத் தளர்த்தும்படி அமெரிக்காவின் நோய் பரவல், தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது.
இதில் சிங்கப்பூர் ஆக பாதுகாப்பான நாடு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாண்டின் தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளை கருத்தில் ெகாண்டு ஜப்பான் தொடர்பான பயண அறிவுறுத்தலையும் அது மறுபரிசீலனை செய்ய உள்ளது.
இதன்படி, பயணம் செய்யக் கூடாது என்ற 4ஆம் நிலை அறி வுறுத்தலுக்கு இலக்காகியிருந்த 61 நாடுகளுக்கு எதிரான அறிவுறுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 50 நாடுகளுக்கு எதிரான நிலை இரண்டாம் கட்டம் அல்லது முதலாம் கட்டத்துக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ேநாய் பரவல், தடுப்பு மைய பேச்சாளர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
எந்த நாட்டுக்கு ஒருவர் பயணம் செய்ய உத்தேசித்தாலும் அவர் முதலில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்றாம் நிலையிலுள்ள நாடுகளுக்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், அவசியமில்லாத பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல், கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தடுப்பூசியை போட்டுக்கொள்ளாதவர்கள் அவசியமில்லாத பயணம் மேற் கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, மிகவும் பாதுகாப்பாக உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் செல்லலாம் என்று அந்த மையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, மிகவும் குறைவான அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், இஸ்ரேல், தென்கொரியா, ஐஸ்லாந்து, பெலிஸ், அல்பேனியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பட்டியலின் மூன்றாம் நிலையில் பிரான்ஸ், ஈக்குவேடோர், பிலிப்பீன்ஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரேன், ஹோண்டுராஸ், ஹங்கேரி, இத்தாலி போன்றவை உள்ளன.
தற்பொழுது தனது பயண அறிவுறுத்தலை திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அெமரிக்க வெளியுறவு அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன் தொடர்பில் 90க்கும் அதிகமான நாடுகளின் நோய் அபாய நிலையை செவ்வாய்க்கிழமை வெளியுறவு அமைச்சு குறைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
முன்னதாக, கடந்த மே மாதம் 24ஆம் தேதியன்று, ஜப்பானில் கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதைக் காரணம் காட்டி அெமரிக்க வெளியுறவு அமைச்சு அந்நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெரிவித்திருந் தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சின் இந்தப் பரிந்துரை கவலைஅளிப்பதாக அமைந்ததால், பின்னர் அமெரிக்க அதிபர் மாளிகை ேதாக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

