சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சின் 'காம்லிங்க்' எனும் சமூகத் தொடர்பு முயற்சியின் கீழ் குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதிய மடிக்கணினியைப் பெறவிருக்கின்றனர்.
வீட்டிலிருந்து பள்ளிப் பாடங்களை படித்து வரும் மாணவர் களுக்கு உதவுவதற்காக மடிக் கணினிகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக கெப்பல் நிறுவனம் 150 மடிகணினிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அடுத்த மூன்று வார காலத்தில் மடிக்கணினிகள் விநியோகிக்கப்படும் என்று கெப்பல் தெரிவித்தது. சமூகத் திட்டத்தின்கீழ் மாணவர்களின் கல்வி, செறிவூட்டல் வகுப்புகளுக்கு எஞ்சிய கணினிகள் பயன்படுத்தப்படும்.
கெப்பல் குழுமத்தின் தொண்டூழியர்கள் மாணவர்களுக்கு மின்னிலக்க கல்வியறிவு பயிலரங்கு களையும் நடத்தவிருக்கின்றனர்.
மடிக்கணினிகளை எப்படி இயக்குவது, அதற்கு தேவையான கணினி மென்பொருளை எப்படி பயன்படுத்துவது போன்றவை பயிலரங்கில் கற்றுத் தரப்படும்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு உதவ 2020ல் 4.2 மில்லியன் பராமரிப்பு திட்டத்தை கெப்பல் அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக மடிக் கணினிகள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.
கொள்ளைநோய் பரவத் தொடங்கியதிலிருந்து அதற்கு எதிரான உலக முயற்சிகளுக்கு ஐந்து மில்லியன் வெள்ளி வரை கெப்பல் குழுமம் உதவி வழங்கியுள்ளது.
கெப்பல் கேர் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹோ டோங் யென், கொள்ளைநோயால் மின்னிலக்கமயம், இணையம் வழி கற்றல் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இது, கிருமிப் பரவல் கட்டுப் படுத்தப்பட்ட பிறகும் தொடரும் என்றார் அவர்.
மின்னிலக்க சாதனங்கள், மின்னிலக்க கல்வியறிவை ஊக்கு விப்பதன் மூலம் குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் களின் கல்வித் தேவையை எங்க ளால் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் காலகட்டத்தில் மாண வர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்கு உதவி யாக இருக்கும் என்று திரு ஹோ டோங் யென் சொன்னார்.
இதற்கிடையே ெகப்பலின் உதவிக்கு சமூக, குடும்ப மேம் பாட்டுக்கான நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மாணவர்களுக்கு உதவும் அதன் முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண் டார்.

