வேலையிடப் பிரச்சினையில் மரணமும் காயமும் விளைவித்த ஆடவருக்கு 20 ஆண்டு சிறை

வேலையிடப் பிரச்சினையில் மரணமும் காயமும் விளைவித்த ஆடவருக்கு 20 ஆண்டு சிறை

2 mins read
39244fb9-0003-4f74-a6ab-81fe042b6315
20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யீ ஜிங் மான் படம்: எஸ்பிஹெச் -

இணைய வர்த்­த­கம் ஒன்­றின் சேமிப்­புக் கிடங்கு ஊழி­ய­ராக வேலை பார்த்து வந்த ஒரு­வர் தம்மை வேலை­யை­விட்டுத் தூக்­கி­ய­தால் அந்த நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­கள் இரு­வர் மீது தாக்­கு­தல் மேற்­கொண்­டார்.

இதில் ஒரு­வர் மர­ண­ம­டைந்­தார், மற்­றொ­ரு­வ­ருக்கு கடு­மை­யான காயங்­கள் ஏற்பட்டன.

யீ ஜிங் மான் என்ற அந்த ஊழி­யர் மூன்­றா­வது இயக்­கு­நர் மீது தாக்­கு­தல் நடத்­த­வில்லை. ஆனால், அவர் சீனப் புத்­தாண்­டிற்­காக கொடுத்த $20யுடன் கூடிய சிவப்பு அன்­ப­ளிப்புப் பையை சாப்­பிட வைத்­தார்.

இதன் பின்­னர், அந்த அலு­வ­லக நுழை­வா­யி­லில் மேசை­கள், நாற்­கா­லி­க­ளு­டன் கூடிய தடுப்பு ஒன்றை ஏற்­ப­டுத்தி தான் கையில் வைத்­தி­ருந்த இறைச்சி வெட்­டப் பயன்­ப­டுத்­தும் கத்­தி­யைக் காண்­பித்து எவ­ரும் தம்மை நெருங்­கா­த­வாறு மிரட்­டி­னார்.

சுங்கை காடுட்­டில் உள்ள ஜி ஜி எனப் பெயர் கொண்ட அந்த இணைய வர்த்­தக நிறு­வ­னத்­தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி யீ தமது முத­லா­ளி­கள் மீது மேற்­கூ­றப்­பட்ட தாக்­கு­தலை நடத்­தி­னார்.

யீக்கு 20 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்து நேற்று நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது. இதில் திரு லின் ஸின்ஜி, வயது 29, என்­ப­வ­ருக்கு மர­ணம் விளை­வித்த குற்­றம், திரு லி மிங்­யி­யாவ், 30, என்­ப­வ­ருக்கு ஆபத்­தான ஆயு­தம் கொண்டு கடும் காயம் விைளவித்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்ெ­காண்­டார். அவர்­கள் இரு­வ­ரும் அந்த நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­கள் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இவற்­று­டன் தண்­டனை விதிப்­பின் போது மேலும் எட்­டுக் குற்­றச்­சாட்­டு­கள் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன. அதில் ஒன்று மற்­றோர் இயக்­கு­ந­ரான ரயன் பான்­சாய் ஸிங் என்­ப­வரை மிரட்­டி­யது, நால்­வரை சட்­ட­வி­ரோ­த­மாக தடுத்து வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டு­களும் அடங்­கும்.

யீ கைது செய்­யப்­பட்ட பின் அவ­ருக்கு கடு­மை­யான உள­வி­யல் கோளாறு இருப்­பது தெரி­ய­வந்­தது. அத­னால் அவர் தனது செயல்­ களுக்குப் பொறுப்­பேற்­கும் சக்­தியை பெரு­ம­ள­வில் இழந்­தார் என்­றும் நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.அந்த நிறு­வனத்­தில் யீ 2017ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்­தார் என்­றும் அவர் முத­லில் நன்கு பணி­பு­ரிந்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2018ஆம் ஆண்டு அவ­ருக்கு வழங்­கப்­பட்ட மேலா­ளர் பத­வியை யீ நிரா­க­ரித்­தார். அதற்­குக் கார­ணம் அத­னால் வரக்­கூ­டிய கூடு­தல் பணிச்­சுமை தமக்கு வேலை­யில் நெருக்­கு­த­லைத் தரும் என அவர் நினைத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பின்­னர் 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து யீ தமது பணி­யைச் சரி­வர செய்­ய­வில்லை என்­றும் அவ­ரு­டைய முத­லா­ளி­கள் மீது குறை­காண ஆரம்­பித்­தார் என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.