மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிப்பு

மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிப்பு

2 mins read
8ba94207-2c4b-4dd2-8926-dc1d7ffb5e0b
-

உணவு, பான நிலை­யங்­களில் இம்­மா­தம் 20ஆம் தேதிவரை அமர்ந்து உண்ண முடி­யாது. இது­போன்று மேலும் ஒரு வார காலத்­திற்­குக் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் செயல்­பட வேண்­டி­யி­ருக்­கும் துறை­க­ளுக்­காக மேம்­ப­டுத்­தப்­பட்ட வேலை ஆத­ர­வுத் திட்­டம் நீட்­டிக்­கப்­ப­ட­ உள்­ளது.

அத்­து­றை­க­ளுக்கு இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் 10% நிதி­யா­த­ரவு கிடைக்­கும்.

அத்­திட்­டத்­தின்­கீழ், ஒவ்­வோர் உள்­ளூர் ஊழி­ய­ரின் மொத்த மாத ஊதி­யத்­தின் முதல் 4,600 வெள்ளி­யில் குறிப்­பிட்ட விழுக்­காட்டை அர­சாங்­கம் வழங்கி வரு­கிறது.

கடந்த மே 16ஆம் தேதி­யில் இருந்து இம்­மா­தம் 13ஆம் தேதி­ வ­ரைக்­கும், உணவு, பானத் துறைக்கு வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் நிதி­ ஆத­ரவு 10 விழுக்­காட்­டில் இருந்து 50 விழுக்­கா­டாக உயர்த்­தப்­பட்­டு இருக்கிறது.

நட­வ­டிக்­கை­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்ள உடற்­பயிற்­சிக்­கூ­டங்­கள், உடற்­த­குதி நிலை­யங்­கள், மேடைக் கலை நிறு­வ­னங்­கள், கலைக் கல்வி மையங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கும் இது­போன்று மேம்­ப­டுத்­தப்­பட்ட வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் உதவி வழங்­கப்­பட்­டது.

கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக அவை தங்­க­ளது பல நட­வ­டிக்­கை­களை நிறுத்தி வைக்க வேண்­டி­ய­தா­கி­விட்­டது.

இதற்­கி­டையே, டாக்சி, தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­நர்­களுக்­கான கொவிட்-19 ஓட்­டு­நர் நிவா­ரண நிதியை மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு நீட்­டிப்­ப­தாக அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

அதன்­படி, ஒரு வாக­னத்­திற்கு ஜூலை­யி­லும் ஆகஸ்ட்­டி­லும் 300 வெள்­ளி­யும் செப்­டம்­ப­ரில் 150 வெள்­ளி­யும் வழங்­கப்­படும். அதாவது, முதல் இரு மாதங்களில் நாளொன்றுக்கு பத்து வெள்ளியும் செப்டம்பரில் நாளொன்றுக்கு ஐந்து வெள்ளியும் வழங்கப்படும்.

இதற்காகக் கூடுதலாக $40 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பயன்பெறுவர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.