பொருளியலுக்குப் பிறகே எல்லைக் கட்டுப்பாடுகள் அகற்றம்

பொருளியலுக்குப் பிறகே எல்லைக் கட்டுப்பாடுகள் அகற்றம்

1 mins read
480d83e9-5bfb-4e44-b0b1-98d91ea5b1c3
-

பாது­காப்­பான முறை­யில் சிங்­கப்­பூர் உள்­ளூர் சமூகத்தைத் திறந்­து­விடு­வ­தும் பொரு­ளி­யலை மீண்­டும் செயல்­ப­ட வைப்பதும் அர­சாங்­கத்­தின் உட­னடி முன்­னு­ரிமை என்­றும் அதற்­குப் பிறகே எல்லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த முடி­யும் என்­றும் வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூர் சூழ்­நிலை நிலை­யாக ஆன­தற்­குப் பிற­கு­தான் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை எப்­படி தளர்த்­து­வது என்­பது பற்றி சிங்­கப்­பூர் யோசிக்கத் தேவை­யான சூழ்­நிலை இருக்­கும் என்றார் அவர்.

பல அமைச்­சு­களை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் தலை­வர்­களில் ஒருவரான திரு கான், நேற்று மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசி­னார்.

சிங்­கப்­பூ­ரைத் தங்­கள் தாய­கமா­கக் குறிப்­பி­டு­கின்ற ஆனால் இப்­போது வெளி­நா­டு­களில் வசிக்­கின்ற வெளி­நாட்­டினர் இங்கு திரும்ப வாய்ப்பு கிடைக்­குமா என்று கேட்­ட­போது, அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பும் வெளி­நாட்­டி­னர் என்பதை­யும் அவர்­கள் இங்கு தங்கி இருந்து பல ஆண்­டு­க­ளாக வேலை பார்த்­த­வர்­கள் என்­பதையும் மன­தில் கொண்டு தொடர்ந்து எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை மறுபரி­சீ­லனை செய்­து­வ­ரு­கி­றோம் என்றார்.

அடுத்த இரண்டு வாரங்­களில் உள்­ளூர் சமூ­கத்­தைத் திறந்து விடு­வ­தும் பொரு­ளி­யலை மீண்­டும் செயல்பட வைப்பதும் சமூகத்தில் அதிக மக்கள் கலந்­து­ற­வா­டு­வ­தை,­உண­வகங்­களில் சாப்­பிடுவதை­ அனு­ம­திப்­ப­தும் ஒரு­மி­த்த கவ­னம் செலுத்­தப்­படும் அம்­சங்களாக இருக்­கும் என்று வர்த்தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­னார்.