இனவாதச் செயல்கள் பற்றி அதிபர்: கசப்பான உண்மைகளை எதிர்கொள்ள இது தக்க தருணம்

3 mins read
e6345790-47a9-44db-8dea-fb92f4d5bc14
-

வெறுப்­பு­ணர்­வை­யும் பேரா­திக்க உணர்வை­யும் வெளிப்­ப­டுத்தி இருக்­கும் அண்­மைய சம்­ப­வங்­கள் அரும்­பா­டு­பட்டு நாம் சாதித்து இருக்­கும் பிணைப்­பு­மிக்க சமூ­கத்­தின் மீது சிங்­கப்­பூர் கொண்­டுள்ள நம்­பிக்கையை அசைத்து இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்து இருக்­கிறார்.

அத்­த­கைய சம்­ப­வங்­கள் ஒரு நேர சம்­ப­வங்­களா அல்­லது பெரிய பிரச்­சி­னை­யின் பிர­தி­ப­லிப்பா என்ற ஓர் ஐயம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­பர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­வர் மற்­றொரு வருக்கு எதி­ராக அத்­த­கைய உணர்­வு­களை வெளிப்­ப­டுத்தி இருப்­ப­தா­கத் தெரி­விக்­கும் செய்­தி­கள் கவலை தரு­வ­தாக ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­துள்ள அதி­பர், அத்­த­கைய செயல்­கள் மிக­வும் மன வருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

அதுபோன்ற தப்­பெண்­ணங்­கள் நம் இளை­யர்­க­ளைப் பாதித்து அவர்­க­ளின் மன­தில் எந்த அள­வுக்கு இடம் பிடிக்­கும் என்­பதே ஆகப் பெரிய அச்­ச­மாக இருப்­பதா­க­வும் அதி­பர் கூறி­னார்.

சட்­டம் மட்­டுமே அதுபோன்ற செயல் களைத் தடுத்­து­விட முடி­யாது என்று தெரி­வித்த அதி­பர், சமூ­கப் பிணைப்­பின் முக்­கி­யத்­து­வத்­தில் அதிக கவ­னம், ஈடு­பாடு கொள்­வ­தற்­கான நேரம் இது என்­றார். அதோடு, உண்­மை­யான பல­ இன, பல சமய சமூ­கத்தைச் சாதிப்­பது எப்­படி என்­ப­தி­லும் இப்­போது கவ­ன­மும் ஈடு­பாடும் இடம்­பெற வேண்­டும் என்று திரு­வாட்டி ஹலி­மா குறிப்­பிட்­டார்.

இந்த நடை­மு­றை­யில் நம்­மைப்­ பற்­றி­யும் நம் நம்­பிக்­கை­கள் குறித்­தும் மிக­வும் வலியை ஏற்படுத்தக்கூடிய உண்மை நில­வ­ரங்­களை எதிர்கொள்ள, அவற்றை மீண்­டும் மதிப்­பிட வேண்டி இருக்­க­லாம் என்று தெரி­வித்த அதி­பர், இது மன­திற்­குப் பிடிக்­காத ஒன்­றாக இருக்­கக்­கூ­டும் என்­றார்.

ஆனா­லும் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் இந்­தப் பய­ணத்தை மேற்­கொள்ள வேண்­டிய தேவை இருக்­கிறது என்று தான் கரு­து­வ­தாக அதி­பர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சமூக ஊட­கப் பய­னீ­டும் இப்­போ­தைய கொவிட்-19 சூழ­லும் உண்­மை­யான பிரச்சி­னை­களை மறைத்­து­வி­டக்­கூ­டிய அம்­சங்­க­ளாக இருப்­ப­தா­க­வும் திரு­வாட்டி ஹலிமா தெரி­வித்து உள்­ளார்.

கலப்பு இன ஜோடி­யைப் பார்த்து சீன ஆட­வர் ஒரு­வர் இன­வாத கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­தைக் காட்டும் ஒரு காணொளி சென்ற வாரம் தலை­காட்­டி­யது.

ஃபேஸ்புக் புழங்­கி­யான லிவ­னேஷ் ராமு என்­ப­வர் கடந்த புதன்­கி­ழமை காணொளி ஒன்­றைப் பதி­வேற்­றி­னார். ஆட­வர் ஒரு­வர் தன் வீட்­டின் வாயி­லில் வழக்­க­மான இந்து சமய தெய்வ வழி­பாட்­டில் ஈடு­பட்­டுக் கொண்டு இருந்­தார்,

பின்­ன­ணி­யில் சீனப் பெண்­மணி போல் தோன்­றிய ஒரு­வர் காழ்ப்­பு­ணர்­வு­டன் உலோக வட்டு ஒன்­றைத் திரும்­பத்­தி­ரும்ப தட்டி ஒலி எழுப்­பிக்­கொண்டு இருந்த தாகத் தெரிந்­தது.

சிங்­கப்­பூர் போலிஸ் அந்­தக் குடும்­பத்­து­டன் தொடர்பு கொண்­டி­ருப்­ப­தாக அந்த ஃபேஸ்புக் பதி­வில் பிறகு தக­வல் இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூ­ரில் அண்­மை­யில் நிகழ்ந்­துள்ள இத்­த­கைய சில சம்­பவங்­கள் பர­வ­லாக கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. பொது­மக்­களிடையே, அமைச்­சர்­க­ளி­டையே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே விவாதத்­தைக் கிளப்­பி­விட்­டுள்­ளன.

அதி­ப­ரின் யோச­னை­யின் பேரில் 2019ல் பல சம­யங்­க­ளுக்கு இடை­யில் முதல்­முறை­யாக உயர்­நிலை கருத்­த­ரங்­கம் ஒன்று சிங்­கப்­பூ­ரில் நடந்­தது. அதில் சுமார் 40 நாடு­க­ளைச் சேர்ந்த 1,100 பேருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அந்­தக் கருத்­த­ரங்­கினை அதி­பர் நினைவு­கூர்ந்­தார். உணர்­வு­ப்பூர்­வ­மான ஓர் அம்­சம் தொடர்­பான கருத்­த­ரங்கை அனைத்­து­லக பிர­மு­கர்­க­ளைக் கூட்டி நடத்­து­வது விவே­க­மாக இருக்­குமா என்று தொடக்­கத்­தில் ஓர் எண்­ணம் ஏற்­பட்­டது.

ஆனால் பிணைப்புமிக்க சமூ­கங்­களுக்கு இன, சமய மிரட்­டல்­கள் எப்­போ­துமே இருந்­து­வ­ரும் என்­றும் அதே­வேளை­யில் பொருள் பொதிந்த வழி­களில் நடக்­கும் விவா­திப்­பு­கள் கார­ண­மாக பாதகங்களை­விட சாத­கங்­களே அதி­க­மாக இருக்­கும் என்றும் தான் நம்­பி­ய­தாக அதிபர் குறிப்­பிட்­டார்.

இன, சமூக நல்­லி­ணக்கத்­திற்கு நூற்­றுக்கு நூறு நிறை­வான, முழு­மை­யான முன்­மா­திரி என்று சிங்­கப்­பூர் தன்­னைக் கூறிக்­கொள்வதில்லை என்று குறிப்­பிட்ட அதி­பர், வெறுப்­பு­ணர்­வும் அவ­நம்­பிக்­கை­யும் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டா­மல் தடுக்க சிங்­கப்­பூர் பாடு­படு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

வெவ்­வே­றான சம­யங்­க­ளைச் சேர்ந்த மற்­ற­வர்­க­ளின் கண்­ணோட்­டங்­களை, கவலை­கள், அக்­க­றை­களை, அச்­சத்­தைப் புரிந்­து­கொள்ள உண்­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு அதன் வழி இது சாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதி­பர் கூறி­னார்.

இதன் மூல­மா­கத்­தான் உண்­மை­யான சமூகப் பிணைப்பை காண­லாம் என்ற அதி­பர், ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரி­டம் கருணை, அன்­பு­டன் நடந்­து­கொண்டு செயல்­பட தொடங்­கும்­படி சிங்­கப்­பூ­ரர்­களை வலி­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூர் அனைத்து வகை புற ஆதிக்­கத்­திற்­கும் இலக்­கா­கக்­கூ­டி­யது என்­ப­தைச் சுட்­டிய அதி­பர், பல வெளி­நாடு­களில் சமூ­கங்­க­ளைப் பிள­வு­ப­டுத்­தி­விட்ட கலா­சார மோதல்­கள் இங்கு இறக்­கு­ம­தி­யாவதைத் தவிர்க்க கவனமான அணுகு முறை இடம்­பெற வேண்­டும் என்றார்.