படிப்படியாக உயரும் சம்பள முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஊழியர்கள், முதலாளிகள் போன்ற சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இதனால் படிப்படியாக உயரும் சம்பள முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படும். திறன் அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்களையும் அது நிர்ணயிக்கும்.
முத்தரப்புப் பங்காளித்துவக் கலந்துரையாடல் காரணமாக இந்த சம்பள முறையை நடைமுறைப்
படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் டாக்டர் டானின் பதில் அமைந்தது.
படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் வரக்கூடிய துறையை அடையாளம் காணவும் பேச்சுவார்த்தைகள் முடியவும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வழக்கமாக இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு, படிப்படியாக உயரும் சம்பள முறையில் துப்புரவுப் பணித் துறை சேர்த்துக்கொள்ளப்படும் என்று 2012ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் 2014ஆம் ஆண்டில்தான் அத்துறையில் அந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
துப்புரவுப் பணியாளர்களின் சம்பளம் 2017ஆம் ஆண்டிலிருந்து உயர்த்தப்பட்டது.
அதே போல நிலவனப்புத் துறையும் இந்த சம்பள முறையின்கீழ் செயல்படும் என்று 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டிலிருந்து அந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது.

