சமூகத்தில் மூவர் உட்பட 9 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் மூவர் உட்பட 9 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
a59fba4f-8f76-4da4-8b14-1925e2277e74
-
Google News Preferred Icon

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் 12 மணி நில­வ­ரப்­படி, சமூ­கத்­தில் மூவர் உட்­பட ஒன்­பது பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. சுகா­தார அமைச்சு நேற்று அதன் அன்­றாட அறிக்­கை­யில் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தது.

சமூ­கத்­தில் உள்ள மூவ­ருக்­கும் மற்ற கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­களுக்­கும் இடையே தொடர்­பில்லை. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­ விடுதி­களில் யாருக்­கும் கிருமி தொற்­ற­வில்லை.

மேலும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த அறுவருக்கு தொற்று இருந்­த­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவர்­கள் இல்­லத் தனிமை உத்­த­ர­வில் அல்­லது தனி­மை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றது அமைச்சு. அந்த ஆறு பேரில் ஐவர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

இவர்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் 62,245 பேருக்கு கொரோனா கண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கடந்த வியா­ழக்­கி­ழமை யாரு­ட­னும் தொடர்பு இல்­லாத இரண்டு சமூ­கத் தொற்­று­கள் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவர்­களில் ஒரு­வர், பாலஸ்­டி­யர் வட்­டா­ரத்­தில் உள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்­லத்­தில் பணி­பு­ரி­யும் துணைத் தாதி­ ஆவார்.

இந்­தி­யா­வைச் சேர்ந்த அந்தத் துணைத் தாதிக்கு நோய் அறி­குறி­கள் இல்லை என்­றும் தாதிமை இல்­லத்­தின் வழக்­க­மான சோத­னை­களில் தொற்று தெரியவந்­தது என்­றது சுகா­தார அமைச்சு.

அத்­து­டன், பொங்­கோ­லில் உள்ள சுமாங் வாக் புளோக் 352ஏ-யில் பரிசோதிக்கப்பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள், வரு­கை­யா­ளர்­கள் 452 பேரில் யாருக்கும் தொற்­றில்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியது.