இங்குள்ள பல முக்கிய தனியார் மருத்துவப் பராமரிப்பு நிறுவனங்கள் கொவிட்-19 கிரு மிக்கு எதிரான சினோவேக் தடுப்பூசியை வழங்கும் உரிமத்துக்காக விண்ணப்பம் செய்துள்ளன.
அந்தத் தடுப்பூசியை வழங்குவதற்கு தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்போவதாக சுகாதாரஅமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
சினோவேக் தடுப்பூசி உரிமங்களுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்று நண்பகலுடன் முடிவுபெற்றது. இருபது தனியார் மருந்தகங்களைத் தேர்வு செய்து, தன்னிடம் உள்ள 200,000 சைனோவேக் தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவற்றைக் கேட்டுக்கோள்ளப் போவதாக சுகாதார அமைச்சு முன்னதாகக் கூறிற்று.
மவுண்ட் எலிசபெத், மவுண்ட் எலிசபெத் நொவீனா, கிளேனீகல்ஸ், பார்க்வே ஈஸ்ட் உள்ளிட்ட மருத்துவமனைகளை நடத்தும் ஐஹெச்ஹெச் சிங்கப்பூர் நிறுவனம் தடுப்பூசிகளைப் போடும் உரிமத்துக்கு விண்ணப்பம் செய்ததாக ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
தற்போதைய கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு மாற்று வழிகளில் பலர் ஆர்வம் காட்டி வருவதால் தங்கள் குழுமம் விண்ணப்பம் செய்தததாகக் கூறினார் அதனை தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் நொவேல் இயோ.
தங்கள் மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அது பற்றி தங்களிடம் கேள்விகள் எழுப்பி உள்ளதாக அவர் சொன்னார்.