பாலியல் ஆசைக்கு இணங்காத மனைவியை தாக்கிய ஆடவருக்கு இரு வார சிறை

பாலியல் ஆசைக்கு இணங்காத மனைவியை தாக்கிய ஆடவருக்கு இரு வார சிறை

2 mins read
983b5453-df80-47d4-81c3-1203c643fbfd
-

பாலி­யல் செய்­கைக்கு மறுப்பு தெரி­வித்த மனை­வி­யைத் தாக்­கிய குற்­றத்­திற்­காக ஆட­வர் ஒரு­

வ­ருக்கு நேற்று இரு வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கெல்­வின் கோக் சோக் மெங், 32, எனப்­படும் அவர் தமது மனை­விக்கு எதி­ராக குடும்ப வன்

­மு­றை­யில் ஈடு­பட்ட குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். ஏற்­கெ­னவே கோக் தாக்­கி­ய­தால் அவ­ரது மனைவி 2017 ஜன­வரி 18ஆம் தேதி தனி­ந­பர் பாது­காப்பு ஆணை (பிபிஓ) பெற்­றார். இந்­நி­லை­யில் இவ்­வாண்டு மார்ச் 17ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு வீடு திரும்­பிய கோக் மது­போ­தை­யில் இருந்­தார்.

நள்­ளி­ரவு சம­யத்­தில் மனை­வி­யின் அறைக்­குச் சென்ற அவர், பாலி­யல் செய்­கைக்கு அப்­பெண்ணை அழைத்­தார்.

அதற்கு மறுத்­த­தால் அப்­பெண்ணை அவர் தாக்­கினார். அதன் கார­ண­மாக தலை, முகம், கழுத்து, கை, தொடை ஆகிய பகு­தி­களில் அப்­பெண்­ணுக்­குக் காயங்­கள் ஏற்­பட்­டன. மருத்­துவ உத­விய நாடிய அதே­வேளை காவல்­து­றை­யி­ட­மும் அவர் புகார் செய்­தார்.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது, பெண் தமது கண­வரை மன்­னித்து ­விட்­ட­தா­லும் இரு­வ­ரும் மண­வாழ்க்கை ஆலோ­சனை பெற்­று­

வ­ரு­வ­தா­லும் இரு வார சிறைத் தண்­ட­னைக்கு அர­சுத் தரப்பு வேண்­டு­கோள் விடுத்­தது. கோக் சார்­பாக வழக்­க­றி­ஞர் எவ­ரும் வாதா­ட­வில்லை.

தமது வேலை பறி­போய்­வி­டும் என்­ப­தால் சிறைத் தண்­ட­னை­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கு­மாறு அவர் வேண்­டு­கோள் விடுத்­தார். அதற்­குப் பதி­ல­ளித்த நீதி­பதி, "ஆனால் உங்­கள் மனைவி உங்­க­ளு­டன் நெருக்­க­மாக இருக்­கத் தயா­ராக இல்­லையே. நீங்­கள் அவ­ரி­டம் வன்­மு­றை­யாக நடந்­து­கொண்­டீர்­களே," என்று கூறி தண்­டனையை அறி­வித்­தார்.