சீனா அதிகாரிகள்போல் ஆள்மாறாட்ட மோசடி

சீனா அதிகாரிகள்போல் ஆள்மாறாட்ட மோசடி

2 mins read
7d90f965-98d1-4652-a79c-83927438fd76
-

ஆள்­மா­றாட்ட மோச­டிக் குற்­றத்­தில் ஈடு­பட்­ட­தாக நேற்று இரு­வர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. இங் ஜீ ஹாவ், 46, சிவ் மெங் டோங், 48 ஆகிய அவ்­விரு வரில் இங் மலே­சி­யர். இங்கு நிரந்­த­ர­வா­சி­யாக உள்ள இவர், மூன்று பேரி­டம் $230,000 பணம் வசூல் செய்து சிவ்­வி­டம் கொடுத்­தார்.

அந்­தப் பணத்­தில் $18,000 தொகையை ஒரு வங்­கிக் கணக்­கில் போட்ட பின்­னர் $186,000 ரொக்­கத்தை மர்ம நபர் ஒரு­வ­ரி­டம் சிவ் கொடுத்­தார்.

இந்­நி­லை­யில் வியா­ழக்­கி­ழமை காவல்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில் மோச­டி­யில் பணம் கொடுத்து ஏமாந்­த­தாக ஐந்து பேரி­டம் இருந்து கடந்த ஆண்டு ஜூலை 18க்கும் ஜூலை 29க்கும் இடைப்­பட்ட நாட்­களில் தங்­க­ளுக்­குப் புகார் வந்­த­தா­கக் கூறியது.

இவர்­கள் அனை­வ­ரும் $1.5 மில்­லி­ய­னுக்­கும் மேல் மோசடி நபர்­ க­ளி­டம் கொடுத்­த­தா­கக் காவல்­து­றை­யி­டம் கூறி­னர். மோசடி நடந்த விதத்தை காவல் துறை­யி­னர் விளக்­கி­னர்.

தங்­களை சீனா­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் என்று சொல்­லிக்­கொண்டு பொது­மக்­களை தொலை­பேசி வாயி­லாக மர்ம நபர்­கள் தொடர்­பு­கொள்­வார்­கள்.

வெளி­நாட்­டுக்­குக் கள்­ளப்­ப­ணம் அனுப்­பி­ய­தாக அந்­ந­பர்­கள் குற்­றம் சாட்­டு­வர். அது சட்­ட­வி­ரோ­தப் பணம் இல்லை என்று நிரூ­பிக்­கும் வகை­யில் தங்­க­ளி­டம் இருக்­கும் தொகையை மர்ம நபர்­க­ளி­டம் அவர்­கள் கொடுத்­துள்­ள­னர். பணம் பெற்­ற­வர்­கள் தர­குத் தொகை பெறும் நோக்­கில் மர்­மக் கும்­பல் ஒன்­றுக்­காக செயல்­பட்­டது காவல்­துறை விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. தர­குப் பணம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

இரு­வ­ரும் தலா $15,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர். மீண்­டும் ஜூலை 9ஆம் தேதி விசா­ரணை தொடங்­கும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஆள்­மா­றாட்ட மோச­டிக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் பத்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $500,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.