ஒரு லட்சத்துக்கும் கீழ் தொற்று குறைந்தது

ஒரு லட்சத்துக்கும் கீழ் தொற்று குறைந்தது

2 mins read
c553822d-3ef4-444c-a155-7c5f5ade411d
-
Google News Preferred Icon

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தொடர்ந்து நான்­கா­வது நாளாக நேற்று கிரு­மித்­தொற்று ஒரு லட்­சத்­துக்­கும் கீழ் பதி­வா­கி­யுள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் பதி­வான கொரோனா தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் விவ­ரங்­களை சுகா­தா­ரத்துறை அமைச்சு வெளி­யிட்டது.

அதன்­படி கடந்த 24 மணி­ நேரத் ­தில் இந்­தி­யா­வில் 91,702 பேருக்கு புதி­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்­ணிக்கை 2 கோடியே 92 லட்­சத்து 74 ஆயி­ரத்து 823ஆக அதி­ க­ரித்­துள்­ளது. தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 11 லட்­சத்து 21 ஆயி­ரத்து 671 பேர் தற்­போது சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். கொரோனா பாதிப்­பி­லி­ருந்து கடந்த 24 மணி நேரத்­தில் 134,580 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். இவர்­க­ளு­டன் சேர்த்து தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­தோர் மொத்த எண்­ணிக்கை 2 கோடியே 77 லட்­சத்து 90 ஆயி­ரத்து 73 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

ஆனா­லும் கடந்த 24 மணி நேரத்­தில் கொரோனா கிரு­மிக்கு 3,403 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்­தி­யா­வில் தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 363,079க்கு அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலை­யில் கடந்த மே மாதம் 18 முதல் 45 வயது உள்­ள­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடப்­படும் என்று இந்­திய அரசு அறிவித்த தால் தடுப்­பூ­சிக்கு கடும் பற்­றாக்­குறை ஏற்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜன­வ­ரி­யில் 1.38 பில்­லி­யன் மக்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் பணியை இந்திய அரசு தொடங்­கியது. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், முதி­யோர்­க­ள் ஆகியோருக்கு இதில் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டது.

பின்னர் 45 வயது மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் பணி ஏப்­ர­லில் தொடங்­கப்­பட்­டது.

கடை­சி­யாக, கிரு­மித்தொற்று அதி­க­ரித்­த­தால் தடுப்­பூசி போடு வதை விரை­வுப்­ப­டுத்த விரும்­பிய பிர­த­மர் மோடி, 18க்கும் 45க்கும் இடைப்­பட்ட வய­தில் உள்ளவர் களுக்கும் தடுப்­பூசி போடப்­படும் என்று மே மாதம் அறி­வித்­தார்.

கடை­சி­யாக அறி­விக்­கப்­பட்ட இந்­தப்பிரி­வில் நாட்­டின் மொத்த மக்­கள்­தொ­கை­யில் 43 விழுக்­காட்­டி­னர் அடங்­கி­யுள்­ள­னர்.

அதா­வது இவர்­கள் மட்­டும் 600 மில்­லி­யன் பேர். இவர்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடு­வது மிகவும் சவாலான பணியாக இருக்கும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கொவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் தவிர ஃபைசர், மொடர்னா தடுப்பூசி களுக்கும் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூரில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.