நார்த் பிரிட்ஜ் ரோட்டில் சனிக்கிழமை இரவு நடந்த தீச்சம்பவத்தில் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புளோக் 8ல் நடந்த தீச்சம்பவம் குறித்த தகவலை இரவு சுமார் 10.15 மணிக்கு அறிந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் ஏழாவது மாடியில் உள்ள அந்த வீட்டிய பற்றிய தீ பின்னர் அணைக்கப்பட்டது. ஆறாவது மாடி முதல் பத்தாவது மாடி வரை குடியிருந்த சுமார் 120 பேர் வெளியேற்றப்பட்டனர்.
நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் ஒருவர் டான் டொக் செங் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர்.