ஆயுதமேந்தி கலகத்தில் ஈடுபட்டதாக எழுவர் கைது

மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் போலிசார் ஏழு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் கும்பல் ஒன்று, மூன்று இளையர்களைத் தாக்குவதாக இம்மாதம் 11ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. கும்பலில் இருந்த ஒருவர், 'கரம்பிட்' கத்தியைக்கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்கப்பட்டவர்களில் 14, 15 வயதுகளுடைய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டோரின் அடையாளத்தை குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, மத்திய போலிஸ் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து நேற்று முன்தினம் அவர்களைக் கைதுசெய்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பலைத் தாக்கப்பட்டவர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் வாக்குவாதம் பின்னர் தாக்குதலானது என்றும் ஆரம்பக்கட்ட விசாரணை கூறுகிறது. இன்று ஐவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!