தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலர் பள்ளிகளில் தாய்மொழி கல்வி தொடர்பான சவால்கள்

3 mins read
a587c1c2-cc5f-494f-9860-8f51c2089c99
-

தமது 13 மாத இரட்­டைக் குழந்­தை­க­ளுக்­காக பாலர் பள்ளி தேட­லில் இறங்­கி­ய­போது, பிள்­ளை­கள் தமிழ்­மொ­ழி­யைக் கற்­றுக்­கொள்ள வாய்ப்பு இருக்­கும் என்று திரு ராஜ் எண்­ணி­னார்.

ஆனால் அவ­ரின் வீட்­டுக்கு அரு­கில் உள்ள பாலர் பள்­ளி­களில் தமிழ்­மொழி கற்­பிக்­கப்­ப­ட­வில்லை. இதற்­காக மிகத் தொலை­வில் உள்ள ஒரு பாலர் பள்­ளி­யைத் தேர்வு செய்­ய­லாம் என்­றால் அங்கு இட­மும் இல்லை. அத­னால் அர­சாங்க ஊழி­ய­ரான திரு ராஜ், அவ­ரின் மனைவி இரு­வ­ரும், அரு­கில் உள்ள பாலர் பள்­ளிக்­குத் தங்­க­ள் பிள்­ளை­களை அனுப்பி அங்கு சீன மொழி­யைத் தாய்­மொ­ழிப் பாட­மாக கற்­றுக்­கொள்­ள முடிவெடுத்தனர்.

வள­ரும் பரு­வத்­தின் முக்­கிய கட்­டத்­தில் இருக்­கும்­போதே தமிழ், ஆங்­கி­லம் என இரு­மொ­ழிப் புல­மை­யைத் தம் மகன்­கள் பெற முடி­யா­மல் போனதை இழந்த ஒரு வாய்ப்­பா­கக் கரு­து­கி­றார் திரு ராஜ்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள 1,900க்கும் மேற்­பட்ட பாலர் பள்­ளி­களில் சுமார் 160 பள்­ளி­கள் மட்­டுமே மூன்று தாய்­மொ­ழிப் பாடங்­க­ளை­யும் வழங்கு­கின்­றன.

கிட்­டத்­தட்ட 260 பாலர் பள்­ளி­களில் இரண்டு தாய்­மொ­ழிப் பாடங்­கள் வழங்­கப்­ப­டு­கின்றன. எஞ்­சிய 77% பள்­ளி­களில் ஒரே ஒரு தாய்­மொ­ழிப் பாட­மான சீன மொழியே கற்­றுத் தரப்­ப­டு­கிறது.

ஆசிரியர் பற்றாக்குறை,

ஆங்கிலப் புழக்கம்

இதற்­கி­டையே மூன்று தாய்­மொழிப் பாடங்களும் உள்ள பள்ளி­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­தற்கு ஆசி­ரி­யர்­கள் பற்­றாக்­குறை ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்று ஆய்­வா­ளர்­களும் பெற்­றோர்­களும் கூறு­கின்­ற­னர்.

வீட்­டில் ஆங்­கி­லத்­தில் மட்­டும் பேசும் வழக்­கம் அதி­க­ரித்­துள்­ள­தால் சீன மொழியை நாடும் வழக்­க­மும் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

ஆனால், இவ்­வாறு மொழி ரீதி­யாக பன்­மு­கத்­தன்மை குறை­யும்­போது வரும் ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அடை­யா­ளம், கலா­சா­ரம் ஆகி­யவை பாதிக்­கப்­ப­ட­லாம் என்ற கவ­லை­யும் எழுந்­துள்­ளது.

வட்­டா­ரத்­தில் உள்ள பிள்­ளை­கள் மற்­றும் பெற்­றோர்­க­ளின் தேவை­க­ளை­யும் விருப்­பங்­க­ளை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டே பாலர் பள்­ளி­கள் தாங்­கள் வழங்­கும் தாய்­மொ­ழிப் பாடங்­களை உறுதி­செய்­வ­தாக பாலர் பருவ மேம்­பாட்டு வாரியப் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ் கற்பிக்கும் தகுதி

உள்ளவர்கள் குறைவு

கூடு­தல் தாய்­மொ­ழிப் பாடங்­களைப் பாலர் பள்­ளி­கள் வழங்க வேண்­டு­மா­னால் ஆசி­ரி­யர்­களை ஈர்ப்­பது முக்­கி­யம் என்­றார் பேச்­சா­ளர். சிங்­கப்­பூ­ரில் உள்ள சுமார் 10,500 பாலர் பரு­வக் கல்­வி­யா­ளர்­களில் 700 பேர் மட்­டுமே தமிழ்­மொழி கற்­பிக்­கும் தகு­தி­யு­டை­வர்­கள்.

இருப்­பி­னும், அவர்­கள்­கூட தற்­போது தாய்­மொழி கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­க­ளாக இருப்­ப­தில்லை.

ஆசி­ரி­ய­ரின் சுய விருப்­பம், ஆங்­கில ஆசி­ரி­ய­ராக கற்­பிக்க வேண்­டும் என பள்­ளி­யில் ஏற்­படும் தேவை போன்ற கார­ணங்­க­ளால் இந்­நிலை உரு­வா­க­லாம் என்­றார் பேச்­சா­ளர்.

பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­கள் பத்­தில் அறு­வர் உள்­ளூர்­வா­சி­கள் என்­றும் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் வெளி­நாட்டு ஆசி­ரி­யர்­கள் உள்­ள­னர் என்­றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் சிறந்த பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­களை ஈர்ப்­ப­தும் துறை­யில் அவர்களைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தும் தொடர்ந்து சவா­லாக இருப்­ப­தாக தேசிய கல்­விக் கழ­கப் பிள்ளை மேம்­பாட்டு ஆய்வு நிலை­யத்­தின் கல்­வித்­துறை தலை­வர் டாக்­டர் நிர்­மலா கருப்­பையா கூறி­யுள்­ளார்.

பட்­ட­யத்­தி­லி­ருந்து பட்­டம் பெறு­வ­தைக் கல்­வித் தகு­தி­யா­கக் கொண்டு ஆசி­ரி­யர்­க­ளைத் தேர்­வு­செய்­தால் கல்­வித்­த­ரம் மேம்­ப­ட­லாம் என்ற ஆலோ­ச­னையை டாக்­டர் நிர்மலா சுட்­டி­னார். ஆனால் கல்­வித் தகு­தியை ஏற்­றும்­போது ஆசி­ரி­யர்­க­ளின் எண்­ணிக்கை மேலும் சரி­வைச் சந்­திக்­கும் சாத்­தி­ய­முண்டு.

"பாலர் பள்ளி ஆசி­ரி­யர் ஆவது ஒரு வரம். ஆர்­வம், மீள்­தி­றன், சரி­யான சிந்­தனை ஆகி­யவை ஒரு­வ­ரி­டம் இருந்­தால் இத்­து­றை­யில் நீடிப்­ப­து­டன் நிலைக்­கும் வகை­யில் பங்­க­ளிக்க முடி­யும்," என்று கூறு­கி­றார் 'இட்­டோன்­ஹ­வுஸ்' மவுண்ட்­பேட்­டன் கிளை பாலர் பள்ளி­யில் தமிழ் ஆசி­ரி­ய­ராக உள்ள திரு­வாட்டி பர­மேஸ்­வரி தமிழ்­செல்­வன்.

சீனமொழி பக்கம் சாயும் பெற்றோர்

இதற்­கி­டையே மலாய், இந்­திய பெற்­றோர்­கள் சிலர் தங்­க­ளின் பிள்­ளை­கள் சீன­மொழி பயில்­வதை விரும்­பு­வ­தும் உண்டு. சீனத்தை முக்­கிய மொழி­யா­கக் கருதி பெற்­றோர்­ இவ்­வாறு முடி­வெ­டுக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

தம் மூன்று பிள்­ளை­களும் பாலர் பள்­ளி­யில் சீன மொழி பயின்­ற­தாக இல்­லத்­த­ரசி லாவண்யா பகிர்ந்­து­கொண்­டார். மூத்த மகன் தொடர்ந்து தொடக்­கப்­பள்­ளி­யி­லும் சீன­மொழி பயில்­வ­தா­கக் கூறிய அவர், இதைத் தம் மக­னின் விருப்­பத்­திற்கு விட்­டு­விட்­ட­தா­கச் சொன்­னார்.

மொழி­யும் கலா­சா­ர­மும் பின்­னிப் பிணைந்­தது என்று கரு­தும் டாக்­டர் நிர்மலா, "தங்­க­ளின் தாய்­மொழி தொடர்­பில் குறை­வா­கக் கற்­கும் அல்­லது அறிந்­தி­டும் பிள்­ளை­க­ளுக்­குக் கலா­சா­ரம் தொடர்­பி­லும் குறைந்த அளவு புரிந்­து­ணர்வு இருக்­கும்," என்­றார்.