பூன் லே வட்டாரத்தில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களில் சிலர் முகக்கவசம் அணியவில்லை.
கொவிட்-19 சூழலை முன்னிட்டு இறுதிச் சடங்கில் அதிகபட்சம் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம் என்ற விதிமுறை மீறப்பட்டது.
குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களில் 14 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
புளோக் 191 பூன் லே டிரைவில் பிற்பகல் 1 மணி அளவில் கூட்டம் திரளத் தொடங்கியதாகவும் இரவு 7 மணி வரை இறுதிச் சடங்கு நடந்ததாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.
குடியிருப்புக் கட்டடத்தைச் சுற்றி ஒரு மணி நேரத்துக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும் அதில் கலந்துகொண்டவர்கள் சத்தம் போட்டு முழக்கமிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.