இறுதிச் சடங்கில் 200 பேர்; 14 பேர் கைது

பூன் லே வட்டாரத்தில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.

அவர்களில் சிலர் முகக்கவசம் அணியவில்லை.

கொவிட்-19 சூழலை முன்னிட்டு இறுதிச் சடங்கில் அதிகபட்சம் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம் என்ற விதிமுறை மீறப்பட்டது.

குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களில் 14 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

புளோக் 191 பூன் லே டிரைவில் பிற்பகல் 1 மணி அளவில் கூட்டம் திரளத் தொடங்கியதாகவும் இரவு 7 மணி வரை இறுதிச் சடங்கு நடந்ததாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.

குடியிருப்புக் கட்டடத்தைச் சுற்றி ஒரு மணி நேரத்துக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும் அதில் கலந்துகொண்டவர்கள் சத்தம் போட்டு முழக்கமிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!