மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் தடுப்பூசி போடும் நான்கு மையங்களில் மூன்றாவது மையம் திறப்பு ஐடிஇ மாணவர்களுக்கு தடுப்பூசி தொடங்கியது

மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் தடுப்பூசி போடும் நான்கு மையங்களில் மூன்றாவது மையம் திறப்பு ஐடிஇ மாணவர்களுக்கு தடுப்பூசி தொடங்கியது

2 mins read
9f8853f7-d5a7-4762-96d9-1a6d4a767ca8
தொழில்நுட்பக் கல்விக்கழக மேற்கு கல்லூரியின் வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொழில்­நுட்­பக் கல்விக்கழக மாண­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வது நேற்று தொடங்­கி­யது.

பள்ளி மாண­வர்­கள், உயர் கல்வி நிலைய மாண­வர்­கள், தன்­னாட்சி பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், பல­து­றைக் தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­கள் என கிட்­டத்­தட்ட 400,00 மாண­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் திட்­டத்தை அரசு அறி­வித்­தி­ருந்­தது.

இதற்­காக, கல்வி அமைச்சு நான்கு தடுப்­பூசி மையங்­களை அமைக்க திட்­ட­மிட்­டி­ருந்­தது.

அதன்­படி, இம்­மாதம் 7ஆம் தேதி அங் மோ கியோ­வில் உள்ள தொழில்­நுட்­பக் கல்விக்கழக மத்திய கல்­லூ­ரி­யில் தடுப்­பூசி மையம் திறக்­கப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து சுவா சூ காங், சிமேய் ஆகிய இடங்­களில் இரண்­டா­வது, மூன்­றா­வது தடுப்­பூசி மையங்­கள் திறக்­கப்­பட்ட நிலை­யில், தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடும் இயக்­கம் நேற்று தொடங்­கி­யது.

தற்­போ­தைய நிலை­யில் 300,000க்கும் அதி­க­மான மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்கு பதிவு செய்­து­கொண்­டுள்­ள­னர்.

இவர்­களில் இது­வரை 101,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­தாக இரண்­டாம் கல்வி அமைச்­ச­ரான மாலிக்கி ஒஸ்­மான் தெரி­வித்­துள்­ளார்.

இது பற்றி நேற்று பேசிய அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான், "எங்­க­ளது முதல் தொகுப்பு மாண­வர்­கள், அதா­வது கல்வி முடித்து பட்­டம் பெற­வி­ருக்­கும் மாண­வர்­களில், 90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள பதிவு செய்­துள்­ள­னர். இவர்­களில், கிட்­டத்­தட்ட 75 விழுக்­காட்­டி­னர் முதல் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர்," என்று கூறி­னார்.

தற்­போ­தைய நிலை­யில் இவ்­வாண்டு ஆகஸ்ட் மாதத்­துக்­குள் மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி மருந்தை முழு­மை­யா­கப் போட்­டு­வி­டு­வது திட்­டம் என்­றும் அவர் விளக்­கி­னார்.

அமைச்­சின் தடுப்­பூசி திட்­டத்­துக்கு இது­வரை எவ்­வித பதி­லும் தெரி­விக்­காத பெற்­றோ­ரைத் தொடர்பு­ கொண்டு அவர்­க­ளின் கவ­லை­களை தெரிந்­து­கொள்ள ஆசி­ரி­யர்­கள் முயன்று வரு­வ­தா­க டாக்டர் மாலிக்கி தெரி­வித்­தார்.

"ஒருக்­கால் பெற்­றோர், இணை­யம் வழி எவ்­வாறு பதிவு செய்து வது எனத் தெரி­யா­மல் இருக்­க­லாம், அல்­லது அவர்­க­ளுக்கு தடுப்­பூ­சி­யின் பாது­காப்பு தன்மை குறித்த கேள்­வி­கள் இருக்­க­லாம்.

இத­னால்­தான் நாங்­கள் ஆசி­ரி­யர்­களை பெற்­றோ­ரு­டன் தொடர்பு கொள்ள கூறி­யி­ருக்­கி­றோம்," என்று அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

சில பெற்­றோ­ருக்கு தங்­கள் பிள்­ளை­களை, குறிப்­பாக இளம் வயது பிள்­ளை­களை, தடுப்­பூசி மையங்­க­ளுக்கு கூட்­டிச் செல்­வது சிர­ம­மாக இருக்­க­லாம்.

இவர்­க­ளுக்கு உதவ நாங்­கள் பள்ளி திறந்­த­தும் பெற்­றோர், பிள்­ளை­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளைத் தொடர்பு கொள்­ளு­மாறு சொல்­லி­யி­ருக்­கி­றோம் என்­றும் டாக்டர் மாலிக்கி கூறினார்.