சமூகத்தில் 18 பேர் உட்பட 25 பேருக்கு தொற்று

சமூகத்தில் 18 பேர் உட்பட 25 பேருக்கு தொற்று

1 mins read
12119cf5-68e5-48aa-80b6-1bd4f7e34dfd
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் 12 மணி நில­வ­ரப்­படி, சமூ­கத்­தில் 18 பேர் உட்­பட 25 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. சுகா­தார அமைச்சு நேற்று அதன் அறிக்­கை­யில் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தது.

ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­யில் ஒரு­வ­ருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது.

நேற்று அறி­விக்­கப்­பட்ட கிரு­மித் தொற்­று­களில் இரண்டு பேருக்கு மற்ற கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளுக்­கும் இடையே தொடர்­பில்லை. 17 பேருக்கு முந்­தைய தொற்று சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்பு உள்­ளன. அவர்­களில் 13 பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு விட்­ட­னர். நான்கு பேருக்கு கண்­கா­ணிப்­புச் சோத­னை­க­ளின்­போது கிரு­மித்தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

மேலும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த அறு­வ­ருக்கு தொற்று இருந்­த­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவர்­கள் இல்­லத் தனிமை உத்­த­ர­வில் அல்­லது தனி­மை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றது அமைச்சு. அந்த ஆறு பேரில் மூவர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள். இவர்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் 62,301 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.