கொலை முயற்சி: 60 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

கொலை முயற்சி: 60 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
4c2bd617-2d77-477f-8a6a-8f461b760c39
-

கொலை முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தாக 60 வயது ஆட­வர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று 52 வயது ஆட­வர் ஒரு­வரை ஓங் எங் சியூ கத்­தி­யால் சர­மா­ரி

­யா­கக் குத்­தி­ய­தா­கக் நம்­பப்­ப­டு­கிறது. இந்­தச் சம்­ப­வம் புளோக் 407 சுவா சூ காங் அவென்யூ 3ல் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சம்­பவ இடத்தை போலி­சார் அடைந்­த­போது தாக்­கப்­பட்ட ஆட­வர் கத்­திக்­குத்­துக் காயங்­க­ளு­டன் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். சம்­பவ இடத்தை போலி­சார் அடை­வ­தற்கு முன்பு ஓங் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­று­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் தாக்­கு­தல் நடந்து இரண்டு மணி நேரத்­துக்­குள் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று ஓங் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.