தமிழர் பேரவை: புரிதலுடன் போராட வேண்டும்

2 mins read
c1158e92-04c1-4a3f-b3ca-5e3286348789
-

அண்­மை­யில் இடம்­பெற்ற இன­வாத, தீவிர சம­யப் போக்கு தொடர்­பான சம்­பங்­கள் குறித்து சிங்­கப்­பூர் தமி­ழர் பேரவை 30க்கும் மேற்­பட்ட அமைப்­பு­க­ளின் சார்­பாக கூட்­ட­றிக்கை ஒன்றை நேற்று வெளி­யிட்­டுள்­ளது.

"இவை புதிதோ அல்­லது அசா­தா­ர­ண­மா­ன­வையோ அல்ல. இத்­த­கைய மோச­மான செயல்­கள் நம் அனை­வ­ரி­ட­மும் உள்ள முன்­ தீர்மானத்­தால் ஏற்­படும் தவ­றான எண்­ணங்­க­ளால் நடப்­பவை. வெளிப்­படை­யா­க­வும் நுட்­ப­மா­க­வும் ஒவ்­வொ­ரு­நா­ளும் பாகு­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன. அண்­மைய சம்­ப­வங்­களில் சில கேம­ரா­வில் சிக்­கியவை.

"குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிப்­பது பற்­றி­யும், அவர்­கள் எவ்­வாறு சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் நமது தேசிய விழு­மி­யங்­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­ப­தில்லை என்­பது குறித்­தும் அதி­கம் பேசப்­ப­டு­கிறது. ஆனால் அது போதாது," என்று அறிக்கை சுட்­டி­யுள்­ளது.

"முன்­பை­விட, கரு­ணை­யை­யும் புரிந்­து­ணர்­வை­யும் தற்­போது கடைப்­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது என்று குறிப்­பிட்ட அந்த அறிக்கை, இது பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்­காக வருத்­தப்­படு­வதோ அல்­லது தவ­றான எண்­ணங்­களை எதிர்­கொள்­வ­தில் உள்ள சிக்­கலை ஏற்­றுக்­கொள்­வதோ மட்­டும் அல்ல. இன­வாத, தீவிர சம­யப் போக்கு தொடர்­பா­ன­வற்றை எவ்­வாறு கையா­ளப்­போ­கி­றோம் என்­பதை­யும் பாகு­பாட்டை எவ்­வாறு எதிர்­கொள்­கி­றோம் என்­ப­தை­யும் பொறுத்­தது.

"அதி­ருப்­தியை வெளிப்­ப­டை­யா­க­வும் நேர்­மை­யா­க­வும் பேசும்­போதே அர்த்­த­முள்ள மாற்­றம் ஏற்­படு­கிறது. அமைதி காக்க முடிவு செய்­வது இத்­த­கைய செயல்­களை ஊக்­கு­விக்­கப்­ப­தா­கவே அமை­யும் என்று," என்று குறிப்­பிட்­டது.

"போதிய அறிவோ, பார்­வையோ இல்லை என்று சொல்­வது மட்­டும் போதாது. நமது சமு­தா­யத்­தைப் பற்றி அறிந்­து­கொள்­வ­தும், ஒரு­வருக்­கொ­ரு­வர், தீவிர சம­யப் போக்­கி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சொல்­ வ­தைக் கேட்­ப­தும் நமது பொறுப்பு. நமது அறி­வைப் பெருக்கு­வ­தும் இத்­த­கைய மனப்­போக்­குக்கான சாக்­கு­கள் இல்லை என்­பதை உணர்ந்துகொள்­வ­தா­கும்.

"இச்­சம்­ப­வங்­களில் சில தவ­றானவை என்­பது தெளி­வா­னது. இது தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­வ­திலும் தீவி­ரப்­போக்­குக்கு எதி­ராக நிற்­ப­தி­லும் நமக்கு நாமே உண்­மை­யாக இருக்க வேண்­டும்.

"இன­வாதக் கருத்­து­ கொண்­ட­வர்­கள் சக ஊழி­ய­ரா­கவோ நண்­பரா­கவோ குடும்ப உறுப்­பினராக­வோ­கூட இருக்­க­லாம்.

"தனிப்­பட்ட முறை­யில் வாழ்­வின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் நாம் இன­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக இருக்க வேண்­டும். எதிர்­கொண்டு தீர்க்­கப்­ப­டா­த­போது வெறுப்பு வளர்­கிறது.

"எனவே, எது போது­மா­னது இத்­த­கைய கேள்­வி­கள் அரி­தான, வச­தி­யான அல்­லது தெளி­வா­ன பதில்­க­ளைக் கொண்­டவை. இன­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டம் சிக்­க­லான, கடி­ன­மான பணி. ஆனால் அது கருணை, இரக்­கம், புரி­த­லு­டன் போரா­டப்­பட வேண்­டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அடை­யா­ளம் கண்டு, "உங்­கள் சிர­மத்­தைப் புரிந்­து­கொள்­கி­றேன், உங்­க­ளோடு தோளு­டன் தோள் நிற்­பேன்," என்று சொல்­வது ஓர் எளி­மை­யான தேர்வு," என அந்த அறிக்கை கூறி­உள்­ளது.