இனவாதக் கருத்துக்கு சீன நாளிதழ் பதில்

இனவாதக் கருத்துக்கு சீன நாளிதழ் பதில்

2 mins read
a4a468ae-8ff9-4013-8a75-5ea785cfd5a3
-

சீன நாளே­டான லியான்ஹ சாவ்­பாவ், இன உற­வு­கள் குறித்த அதன் அண்மை தலை­யங்­கத்­திற்கு உள்­ளூர் கல்­வி­யா­ளர்­கள், அறி­ஞர்­க­ள் வெளியிட்ட திறந்த கடி­தத்­திற்கு பதி­ல­ளித்­துள்­ளது.

அண்மையில் இடம்பெற்ற இனவாத சம்பவங்கள் தொடர்பில், இன சமத்­து­வத்தை தொடர்ந்து நிலை­நி­றுத்­த­வும், சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்து இனத்­த­வர்­களி­டை­யே­யும் பரஸ்­பர புரிந்­து­ணர்வை வளர்க்­க­வும் தான் தொடர்ந்து செயல்­பட்­டு­வ­ரு­வ­தாக அத்­த­லை­யங்­கத்­தில் அந்த நாளி­தழ் குறிப்­பிட்­டி­ருந்­தது.

சீன நாளி­த­ழாக, அண்­மை­யில் இடம்­பெற்ற இன­வாத, தீவிர சமயப் போக்கு தொர்­பான சம்­ப­வங்­களைக் கண்­டிப்­ப­தா­க­வும், தனது தலை­யங்­கங்­கள் மூல­மாக இன நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டிக்­காப்­ப­தா­க­வும் அது கூறி­யது.

இதற்கு எழு­தப்­பட்ட திறந்த கடி­தத்­தில் பேரா­சி­ரி­யர்­கள் லிண்டா லிம், லீ சூ ஆன், வினீதா சின்ஹா, பாங் எங் போங் உட்பட முனை­வர் ஆய்­வுப் படிப்பு மாண­வர்­கள், ஆய்­வா­ளர்­கள், கல்வி­யா­ளர்­கள் என 200க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­னர்.

'இன நல்­லி­ணக்­கத்தை வளர்க்க பொது வெளியை விரிவு­ ப­டுத்­து­தல்' என்ற தலைப்­பில் ஜூன் 9ஆம் தேதி வெளிந்த சீன நாளி­த­ழின் தலை­யங்­கத்­தில், இன­வாத பிரச்­சினை குறித்து வகைப்­படுத்­தி­யி­ருப்­ப­தைப் பற்றி கவலை கொள்­வ­தாக அக்­க­டி­தம் தெரி­வித்­தது.

இன­வா­தம் கட்­ட­மைக்­கப்­ப­டு­வ­தன் இயக்­க­வி­ய­லை­யும் சிங்­கப்­பூ­ரில் நீண்­ட­கா­ல­மாக இருக்­கும் இனம் தொடர்­பான ஒரே மாதி­ரி­யான மனப்­போக்­கை­யும் இது புறக்­க­ணிக்­கிறது என்று கடி­தம் கூறி­யி­ருந்­தது.

இன­வா­தம் என்­பது தனிப்­பட்ட தவ­றான எண்­ணங்­க­ளைப் பற்­றி­யது மட்­டு­மல்ல, அமைப்பு முறை­களா­லும் கொள்­கை­க­ளால் ஏற்­ப­டு­கிறது என்­றும் அது கூறி­யது.

ஜூன் 9 தலை­யங்­கத்தை வாச­கர்­கள் முழு­மை­யா­கப் பார்ப்­பார்­கள் என்று நம்­பு­வ­தாக இக்­க­டிதத்­திற்கு சீன நாளி­த­ழ் பதி­ல­ளித்­தி­ருந்­தது. மூன்று வெவ்­வேறு அம்­சங்­க­ளி­லி­ருந்து பிரச்­சி­னையை பகுப்­பாய்வு செய்­வ­தா­க­வும், கொள்­ளை­நோய், சமூக ஊட­கங்­க­ளின் பங்கு, வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும் பிர­ப­ல­மான கருத்­தி­யல் போக்­கு­கள் அனைத்­தும் இன பதற்றத்தை பெரி­தாக்­கி­விட்­டதை விளக்க முற்­ப­டு­வ­தா­க­வும் அது கூறி­யது.

"சிங்­கப்­பூ­ரில் இனம் குறித்த பிரச்­சி­னை­யைப் பற்றி விவா­திக்­கும்­போது, ​​வெளி­நாட்டு நிலை­மை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் உள்­ளூர் நிலை­மை­க­ளுக்கு ஏற்ப மாற்­றிக்­கொள்­ளாமல் அவற்­றைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது.

"ஒவ்­வொரு சமூ­கத்­தி­லும் இனப் பாகு­பாடு நில­வு­கிறது. சில பொது­வா­னவை, சில ஒவ்­வொரு சமூ­கத்­திற்­கும் தனித்­தன்­மை­யா­னவை.

"இன நல்­லி­ணக்­கம், அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கும் ஒரு பொது­வான இலக்கு. கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்ட அறி­ஞர்­கள் இதனை பகிர்ந்­து­கொள்­கி­றார்­கள் என்­ப­தை­யும் பிரச்­சினை குறித்த பகுத்­த­றி­வான, வெளிப்­ப­டை­யான கலந்­து­ரை­யா­டலை வர­வேற்­கி­றார்­கள் என­வும் நம்­பு­கி­றோம்," என்று சீன நாளிதழான சாவ்­பாவ் தனது பதி­லில் கூறி­யுள்­ளது.