அங் மோ கியோ வீட்டில் மோசமான தீ விபத்து

புளோக் 123 அங் மோ கியோ அவென்யூ 6ல் இன்று காலை கடும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் பற்றி தங்களுக்கு காலை 9.40 மணி அளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

புளோக்கின் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் மோசமான தீ எரிந்து கொண்டிருந்ததாகவும் அங்கிருந்து ஒரு நபர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டது.

புளோக் 123ல் இரண்டிலிருந்து நான்காவது மாடி வரை AWWA அமைப்பின் தாதிமை இல்லம் அமைந்திருக்கிறது.

குடிமைத் தற்காப்புப் படையினர் செல்வதற்கு முன்பே, அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்டனர். புளோக்கின் 5ஆம் முதல் 9ஆம் மாடி வரை வசிக்கும் சுமார் 130 குடியிருப்பாளர்களை தனது படையினர் பாதுகாப்பாக வெளியேற்றியதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

புகையாலும் தலைசுற்றலாலும் பாதிக்கப்பட்ட ஏழு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!