ஒற்றையராக இருக்கவே விருப்பம்

ஒற்றையராக இருக்கவே விருப்பம்

3 mins read
841de36d-fc90-421b-abc2-3a7ba2a6e4fb
-

மக்கள்தொகை கணக்கெடுப்பு: குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது தொடர்பான சிந்தனைப்போக்கில் மாற்றம்

'இனம் அடிப்படையிலான தரவுகள் முக்கியம்'

மக்கள்தொகை கணக்கெடுப்பில் இனம் அடிப்படையிலான தரவுகள் தேவை என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. இத்தரவுகள் மூலம் இனரீதியாக வெவ்வேறு பிரிவுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் உதவலாம் என்றார் அவர்.

எந்தப் பிரிவினரும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என்றும் தலையீட்டு திட்டங்கள் மூலம் உதவி வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்தகைய தரவுகள் தேவை என்றார் அமைச்சர் இந்திராணி. மற்ற இனங்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் பின்தங்கியுள்ளவர்களை அடையாளம் கண்டு உடனே நிலையை மேம்படுத்தும் பொருட்டு தரவுகள் கைகொடுக்கும் என்று அவர் சுட்டினார்.

இதற்கிடையே அண்மைய இனவாத சம்பவங்கள் குறித்தும் பேசிய அவர், பல இன, சமய, மொழிச் சூழல் சிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பது முக்கியம் என்று வலியுறுத்தினார்.

இன்­றைய சிங்­கப்­பூ­ரர்­கள், பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்­த­வர்­களைக் காட்­டி­லும் திரு­ம­ணம், பிள்ளை­பேறு ஆகி­ய­வற்­றில் அதிக ஈடு­பாடு காட்­டு­வ­தில்லை. அதி­க­மான இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒற்றை­ய­ராக இருக்­கும் வாழ்க்­கை­மு­றை­யையே விரும்­பு­கின்­ற­னர்.

குடும்ப வாழ்க்கை தொடர்­பான சிந்­த­னைப்­போக்கு காலப்­போக்­கில் மாறி­விட்­ட­தைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் நேற்று வெளி­யி­டப்­பட்ட மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அறிக்கை விளங்­கி­யது.

திரு­ம­ணம், மண­மு­றிவு, இறப்பு

திரு­ம­ண­மான சிங்­கப்­பூர்­வா­சி­களின் விகி­தம் சற்று குறைந்­துள்­ளது. 2010ல் பதி­வான 59.4 விழுக்­காடு, 2020ஆம் ஆண்­டில் 58.8 விழுக்­கா­டா­னது.

தம்­ப­தி­ய­ரி­டையே மண­மு­றிவு ஏற்­பட்­டுள்ள விகி­தம், 2010ல் இருந்த 3.3 விழுக்­காட்­டி­லி­ருந்து சென்ற ஆண்டு 4.3 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தி­ருந்­தது.

வாழ்க்­கைத் துணையை இழந்தவர்கள் நிலையை ஒப்­பி­டும்­போது, ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­க­ளின் எண்­ணிக்­கையே தொடர்ந்து கூடு­த­லாக இருந்­தது.

2020ல் கண­வன்­மாரை இழந்த மாத­ரின் விகி­தம் 8.4 விழுக்­கா­டாக இருந்­தது. மனை­வி­யரை இழந்த கண­வன்­மார்­க­ளின் விகி­தம் 1.9 விழுக்­காடு.

ஒற்­றை­யர்­கள் அதி­க­ரிப்பு

அனைத்து வய­தி­ன­ரி­லும் ஒற்றை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் 25 வய­துக்­கும் 34 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­க­ளி­ன் எண்ணிக்கை ஆக அதி­க­மாக உயர்ந்­திருந்தது.

2010க்கும் 2020க்கும் இடையே 25 முதல் 29 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­களில் ஒற்­றை­ய­ராக உள்ள ஆண்­க­ளின் விகி­தம் 74.6 விழுக்­காட்­டி­லி­ருந்து 81.6 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தது. ஒற்­றை­ய­ராக இருந்த மாதர் எண்­ணிக்கை 2010ல் பதி­வான 54 விழுக்­காட்­டி­லி­ருந்து 2020ல் 69 விழுக்­கா­டா­னது.

அதிக பிள்­ளை­கள் வேண்­டாம்

பத்­தாண்­டுக்கு முன்­னர் இருந்த நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் அதி­க­மான பிள்­ளை­கள் பெற்­றெ­டுக்க விரும்­பாத போக்கு பெண்­க­ளி­டத்­தில் காணப்­பட்­டது. 2010ல் ஒவ்­வொரு பெண்­ணுக்­கும் சரா­ச­ரி­யாக 2.02 குழந்­தை­கள் என்று பதி­வாகி­ இ­ருந்­தது. ஆனால் 2020ல் இது 1.76 ஆகக் குறைந்­தது.

காலம் தாழ்த்­தித் திரு­ம­ணம் செய்­வது, நிதிச் சுமை, பிள்ளை வளர்ப்­பின்­போது கல்­வி­யால் ஏற்­ப­டக்­கூ­டிய அழுத்­தங்­கள் போன்­றவை கார­ணங்­க­ளா­கக் கூறப்­ப­டு­கிறது.

எல்லா இனத்­த­வ­ரி­ட­மும் வெவ்­வேறு கல்­வித் தகு­தி­யு­டை­யோ­ரி­ட­மும் இந்­தப் போக்கு காணப்­பட்­டது.

இதன்­படி 2020ல் ஓர் இந்­தி­யப் பெண்­ணுக்கு 1.86 குழந்­தை­கள், மலாய் பெண்­ணுக்கு 2.43 குழந்தை­கள், சீனப் பெண்­ணுக்கு 1.65 குழந்தை­கள் எனப் புள்­ளி­வி­வ­ரங்­கள் குறிப்­பிட்­டுள்­ளன. தொடர்ந்து இரண்டு பிள்­ளை­க­ளைப் பெற்­றெடுக்­கும் போக்கே பெரும்­பா­லான சிங்­கப்­பூர் பெண்­க­ளி­டம் காணப்­பட்­டது.

பத்­தாண்­டுக்கு ஒரு முறை நடத்­தப்­படும் இந்த கணக்­கெ­டுப்­பில் 150,000 குடும்­பங்­கள் பங்­கேற்­ற­னர்.