பல்வேறு சமயங்களை உள்ளடக்கிய நாடாக சிங்கப்பூர் விளங்கினாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது மேலும் அதிகமான சிங்கப்பூரர்களிடையே சமயசார்பற்ற நிலை உள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. வெவ்வேறு கல்வித் தகுதியுடையோர், வெவ்வேறு இனத்தவர் ஆகியவர்களிடம் இந்த அதிகரிப்பு காணப்படுகிறது. சமயசார்பற்ற அற்ற சிங்கப்பூர்வாசிகளின் விகிதம் 2020ல் மூன்று விழுக்காடு அதிகரித்திருந்தது.
இந்தியர்களில் தொடர்ந்து இந்து சமயமே பெருவாரியான சமயமாக (57.3%) இருந்தது. அதையடுத்து இஸ்லாமிய (23.4%) சமயமும் கிறிஸ்தவ (12.6%) சமயமும் இடம்பெற்றுள்ளன. சமயசார்பற்ற நிலை இல்லை எனும் போக்கைப் பெரும்பாலும் இளம் சிங்கப்பூரர்கள் கொண்டுள்ளனர்.