தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்வாழ் உயிரினங்களுக்கும் தீப்பற்றிய கப்பலுக்கும் இடையே தொடர்பிருக்கலாம்

1 mins read
50dffc9c-5831-4d46-8521-3c1c60595e0d
இலங்கையின் மேற்கு கரையோரத்தில் ஐந்து டால்ஃபின்கள், 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படங்கள்: அம்பலாங்கொடை அதிகாரத்துவ ஃபேஸ்புக் பக்கம் -
multi-img1 of 2

இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­புக்கு அருகே அண்­மை­யில் சரக்­குக் கப்­பல் எரிந்­த­தைத் தொடர்ந்து, அந்­தக் கடற்­க­ரைப் பகு­தி­யில் ஐந்து டால்­ஃபின்­கள், 30க்கும் மேற்­பட்ட கடல் ஆமை­க­ளின் சட­லங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கப்­பூர் கொடி­யைத் தாங்­கிய 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' என்ற அந்­தக் கப்­பல் துறை­மு­கத்­திற்கு அருகே மே 20ஆம் தேதி அன்று தீப்­பி­டித்து எரிந்­தது. அத­னால், எண்­ணெய், ரசா­ய­னங்­கள், பிளாஸ்­டிக் துகள்­கள் கப்­பல் தளத்­தி­லி­ருந்து கட­லுக்­குள் சிந்­தப்­பட்­டுள்­ளன.

இடம் பெய­ராத நீல திமிங்­கிலம், டால்­ஃபின்­கள் உள்­ளிட்ட பல­வகை­யான பெரிய கடல் பாலூட்­டி­கள் வாழும் அந்த கடற்­ப­குதி இத­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூரை தள­மா­கக் கொண்ட 'எக்ஸ்-பிரஸ் ஃபீடர்' கப்­பல் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து இடைக்­கால இழப்­பீ­டாக இலங்கை 40 மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ரைக் (53 மில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி) கோரு­கிறது. இத்­தொகை மே 20 முதல் ஜூன் 1 வரை­யிலான தீய­ணைப்­புச் செல­வு­களை ஈடு­கட்­டு­வ­தா­கும்.

கப்­ப­லில் மீத­முள்ள எண்­ணெய், 'சோடி­யம் டைஆக்­சைடு', தாமி­ரம், ஈயம் போன்ற ரசா­ய­னங்­கள் வெளி­யே­றி­னால் அது அப்­ப­கு­தி­யில் உள்ள வள­மான கடல் வாழ்வை அழிக்­கக்­கூ­டும் என்று சுற்­றுச்­சூழல் ஆர்­வ­லர்­கள் அஞ்­சு­கின்­றனர்.