கொவிட்-19 தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் சில இவ்வாரத் தொடக்கத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் ஹோட்டல்களில் தங்குவதிலும் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதிலும் மக்களின் கவனம் மெல்லத் திரும்பியுள்ளது.
ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்களுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாள், ஜூன் 21. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவது அன்றுமுதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
கொரோனா கிருமிச்சூழல் இழைத்த பாதிப்பிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவரும் பயணத்திற்கு இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வு முக்கியமான ஒன்று என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கிருமிச் சூழல் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும் ஒரு சிலர், காத்திருந்து முடிவெடுக்கும் நிலையில் உள்ளதாக ஹோட்டல் துறையினர் கூறுகின்றனர்.
வரும் வாரங்களில் குடும்பங்களுக்கு மேலும் வசதியான அனுபவங்களைத் தருவதில் ஹோட்டல்கள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.