கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய 20 உடற்பிடிப்பு நிலையங்களை பத்து நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
காவல் துறையினர் மேற்கொண்ட அமலாக்கச் சோதனையின்போது அந்நிலையங்களுக்கு வந்த வாடிக்கையாளர்களும் சேவை வழங்கிய ஊழியர்களும் முகக்கவசம் அணியாதது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியுமாறு வாடிக்கையாளர்களை உடற்பிடிப்பு நிலையங்கள் கேட்டுக் கொள்ளத் தவறின.
இக்குற்றங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு தலா 300 வெள்ளியும் நிலையங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்துள்ளது.