மேம்பட்ட வேலைகள், பாதுகாப்பான வேலையிடங்களுக்குக் கடப்பாடு

மேம்பட்ட வேலைகள், பாதுகாப்பான வேலையிடங்களுக்குக் கடப்பாடு

2 mins read
6a1596d9-85f3-46b9-b494-f832f99bac38
மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19லிருந்து ஏற்படும் உலகாளவிய மீட்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும் நீடித்து நிலைத்திருப்பதாகவும் மீள்திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும் எனும் அனைத்­து­லக தொழி­லா­ளர் அமைப்பின் அழைப்பை சிங்கப்பூர் வரவேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நேற்று நடை­பெற்ற 109வது அனைத்­து­லக தொழி­லா­ளர் மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் இத­னைத் தெரி­வித்­தார்.

கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிந்­திய வருங்­கா­லத்­தில் எல்­லா­ருக்­கும் மேம்­பட்ட வேலை­க­ளை­யும் பாது­காப்­பான வேலை இடங்­க­ளை­யும் உறுதி செய்ய சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறினார்.

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் கீழ், சம்­ப­ளச் செல­வு­களை ஈடு­கட்­ட­வும் வேலை­க­ளைப் பாது­காக்­க­வும் இது­வரை 18 பில்­லி­யன் அமெரிக்க டாலர் அல்­லது கிட்­டத்­தட்ட 25 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி நிறு­வ­னங்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கிறது. 150,000 நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளில் பெரும்­பா­லானோருக்கு அது உத­வி­யுள்­ளது.

அத்­து­டன், சுயதொழில் செய்­வோ­ருக்­கான சம்­பள உத­வித் தொகை திட்­டத்­தில் இது­வரை கிட்­டத்­தட்ட 200,000 பேர் பயன்­பெற்­றுள்­ள­னர் என்­றார் டாக்­டர் டான். அவர்­க­ளுக்கு உத­வித் தொகை­யாக மொத்­தம் 9,000 வெள்ளி வழங்­கப்­பட்­டி­ருக்­கிறது.

எஸ்­ஜி­ யு­னைட்­டெட் வேலைப் பயிற்­சித் திட்­டத்­தின் வழி இவ்­வாண்டு பிப்­ர­வரி வரை, ஏறத்­தாழ 93,000 ஊழி­யர்­க­ளுக்கு வேலைப் பயிற்சி இடங்­கள் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார் அமைச்­சர்.

மேலும், ஊழி­யர்­க­ளின் மன­ந­ல­னுக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வகை­யில் ஐவர்க்­ஹெல்த் (iWorkHealth) எனும் மின்­னி­யல் கருவி அறி­மு­கம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

நிறு­வ­னங்­கள், அவற்­றின் ஊழி­யர்­கள் மன உளைச்­சல் கொள்­ளக்­கூ­டிய அம்­சங்­க­ளைக் கண்­ட­றிய உத­வு­கிறது அந்­தக் கருவி. வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மனநலத்­தின் தொடர்­பில் விழிப்­பு­ணர்­வும் உத­வி­யும் பெற உதவும் திட்டமும் உள்ளது.