தொழி­லா­ளர் சந்தை மீட்சி; 12,200 புதிய வேலை­கள்

தொழி­லா­ளர் சந்தை மீட்சி; 12,200 புதிய வேலை­கள்

2 mins read
4d0a721a-6c88-4c6d-b702-d27d06a4372c
பிராக்­டர் அண்ட் கேம்­பல் நிறு­வ­னத்­தின் புத்­தாக்க மையத்தில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், பொருட்களைக் கண்டறிந்து அவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தும் இயந்திர மனிதனைப் பார்­வை­யிட்டார். அதனை தானியக்க முறையில் வேலைகள் நடக்க அந்த இயந்திர மனிதன் உதவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் தொழி­லா­ளர் சந்­தை­யில் காணப்­படும் மீட்சி தொடர்­கிறது. இதில் கொேரானா கொள்­ளை­நோய் தாக்­கத் தொடங்­கிய பிறகு முதன் முத­லாக மொத்த வேலை­கள் உரு­வாக்­கம் கூடி­யுள்­ளது. வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களை நீக்­கிப் பார்த்­தால், இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் 12,200 பேருக்கு வேலை­ கிடைத்துள்ள­தாக மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை கூறு­கிறது.

இந்த வேலை உரு­வாக்­கம் இதற்கு முந்­திய நான்கு காலாண்டு வேலை­யி­ழப்­பு­க­ளுக்­குப் பின் வந்­தி­ருப்­ப­தாக அமைச்சு சுட்­டி­யது.

இவ்­வாண்டு முதல் காலாண்­டின் வேலை உரு­வாக்­கம் ஏப்­ரல் மாத முன்­னு­ரைப்­பான 4,800 என்ற எண்­ணிக்­கை­யை­விட அதி­கம் என்­ப­தை­யும் அமைச்­சின் அறிக்கை விளக்­கி­யது.

வெளி­நாட்டு ஊழி­யர் வரு­கைக்கு கட்­டுப்­பா­டு­கள் உள்ள நிலை­யில், அவர்­க­ளுக்­கான புதிய வேலை­கள் குறைந்­துள்­ளன. ஆனால், உள்­ளூர்­வா­சி­கள் வேலை­யில் அமர்த்­தப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ள­தாக அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது.

தக­வல், தொலைத் தொடர்பு, உணவு, பானத் துறை, சுகா­தா­ரம், சமூக சேவை, நிர்­வா­கம், அதற்கு தேவைப்­படும் துணைச் சேவை போன்ற துறை­களில் உள்­ளூர்­வாசி­க­ளுக்கு புதிய வேலை நிய­ம­னங்­கள் கிடைத்­துள்ளன.

மேலும், வேலை­யி­ழந்த உள்­ளூர்­வா­சி­களில் அதி­க­மா­னோ­ருக்கு ஆறு மாதங்­க­ளுக்­குள் புதிய வேலை கிைடத்­த­து­டன் வேலை­யில்­லா­தோர் விகி­தத்­துக்கு கிட்­டத்­தட்ட சரி­ச­ம­மான விகி­தத்­தில் வேலை­வாய்ப்­பு­களும் உருவாகியுள்­ள­தாக அமைச்­சின் அறிக்கை கூறு­கிறது.

எனி­னும், கொள்­ளை­நோய் தாக்­கத் தொடங்­கிய நிலைக்கு முந்­திய சூழலை தொழி­லா­ளர் சந்தை இன்­ன­மும் எட்­ட­வில்லை என்­றும் அமைச்சு விளக்­க­ம­ளித்­தது.

இவை ஒரு­பு­ற­மி­ருக்க, பொரு­ளி­ய­லில் உள்ள நிச்­ச­ய­மற்ற தன்மை, அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்ட இரண்­டாம் கட்ட உய­ர்த்தப்பட்ட விழிப்­பு­நிலை நட­வ­டிக்­கை­கள் போன்­றவை இரண்­டாம் காலாண்­டின் தொழி­லா­ளர் சந்­தை­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அது தெரி­வித்­தது.

இது­பற்­றிக் கூறிய மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், பொரு­ளி­யல் மீட்சி நேர் பாதை­யாக இராது என்­றும் அதில் வளை­வு­க­ளு­டன் தடுப்­பு­களும் இருக்­கும் என்று கருத்­து­ரைத்­துள்­ளார்.

"மேலும், பல்­வேறு துறை­களில் பொரு­ளி­யல் மீட்சி, முன்­னர் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட, ஏற்ற இறக்­க­மாக இருக்­கும்," என்று பிராக்­டர் அண்ட் கேம்­பல் நிறு­வ­னத்­தின் புத்­தாக்க யைத்தை பார்­வை­யிட்ட பின் ஊட­கங்­க­ளுக்கு அளித்த நேர்­கா­ண­லில் அமைச்­சர் தெரி­வித்­தார்.