உணவு, பானத் துறை, சிகையலங்கார ஊழியர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை கட்டாய கொவிட்-19 பரிசோதனை

உணவு, பானத் துறை, சிகையலங்கார ஊழியர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை கட்டாய கொவிட்-19 பரிசோதனை

2 mins read
a21fb2bf-b190-4bdf-b579-6edc008eab6e
-

முகக்­க­வ­சம் அணி­யாத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும் அல்­லது தனி­ந­பர்­க­ளுக்­கி­டையே அதிக நேரம் தொடர்­பில் உள்ள ஊழி­யர்­கள் விரைவு ஆன்­டி­ஜென் சோதனை முறை­யைப் பயன்­ப­டுத்­தும் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு வழக்­க­மா­கச் செல்ல வேண்­டும்.

14 நாட்­கள் மேற்­கொள்­ளப்­படும் இந்த விரை­வான, எளி­தான பரி­சோ­த­னை­கள் (எஃப்இடி) ஜூலை நடுப்­ப­கு­தி­யில் கட்­டா­ய­மாக்­கப்­படும் என்று அமைச்­சு­கள்­நி­லைப் பணிக் குழு நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தது.

அமர்ந்து உண்­ணும் உண­வ­கங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள், முகம், நகம் ஆகிய அழகு பரா­ம­ரிப்­புச் சேவை, உடல் வனப்பு நிலை­யங்­கள், உடற்­பி­டிப்பு நிலை­யங்­கள், சிகை­ய­லங்­கா­ரம், ஒப்­பனைச் சேவை, உட­று­லு­திக் கூடங்­கள் ஆகி­ய­வற்­றில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் இந்­தக் கட்­டாய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

மேற்­கண்ட நிலை­யங்­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் சில நேரங்­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தில்லை. இந்த 'எஃப்இடி' பரி­சோ­த­னை­கள், நிலை­யங்­க­ளின் முத­லாளி­கள் மேற்­பார்­வை­யில் சுய­மாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று பணிக்­குழு எதிர்­பார்க்­கிறது.

இந்­தப் பரி­சோ­தனை முறையை வர்த்­த­கங்­கள் தொடங்­கு­வ­தற்கு உத­வும் பொருட்டு, முத­லா­ளி­கள் சுய பரி­சோ­தனை செய்­யும் ஊழி­யர்­களை மேற்­பார்­வை­யிட மூத்த ஊழி­யர்­க­ளைப் பயிற்­சிக்கு அனுப்­பலாம்.

அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு இந்­தப் பயிற்சி இல­வ­ச­மாக வழங்­கப்­படும். சுய பரி­சோ­தனை செய்து­கொள்­ளும் கரு­வி­களும் மேற்­கூறப்­பட்ட நிலை­யங்­க­ளுக்குக் கொடுக்­கப்­படும்.

சில உணவு, பானத் துறை நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­களை முன்­ன­தா­கவே இந்­தப் பயிற்­சிக்கு அனுப்­பி­விட்­டன. அவர்­கள் இம்­மா­தம் 21ஆம் தேதி­யி­லிருந்து இந்த சுய பரி­சோ­தனையை மேற்­கொள்ள தொடங்­க­லாம் என்­றது பணிக்­குழு.

தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­குச் சுய பரி­சோ­தனை முறையை அறி­முகப்­படுத்த இய­லாத சிறிய வர்த்­த­கங்­களுக்கு உத­வும் வகை­யில், விரைவு பரி­சோ­தனை நிலை­யங்­கள் (ஏஆர்டி) அமைக்­கப்­படும் என்று குறிப்­பிட்ட பணிக்­குழு, தொடக்­க­மாக தேக்­கா­வில் ஒரு நிலை­ய­மும் ஈசூ­னில் ஒரு நிலை­ய­மும் இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் செயல்­ப­டத் தொடங்­கும் என்று விவ­ரித்­தது.

இது­போன்ற விரைவு பரி­சோதனை நிலை­யங்­கள் மற்ற பகுதி­களில் படிப்­ப­டி­யாக அறி­முகப்­ப­டுத்­தப்­படும்.

முகக்­க­வ­சம் அணி­யாத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை­யாற்­றும் ஊழி­யர்­கள் மூலம் கிரு­மித்­தொற்று அபா­யத்­தைக் குறைக்க அர­சாங்­கம் அவர்­க­ளுக்கு விரை­வில் தடுப்­பூசி போடும் திட்­டத்தை அறி­முகப்­படுத்­தும்.

முதி­யோ­ருக்­குச் சேவை­யாற்­றும் பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளுக்­குச் செல்லு­தல் இம்­மா­தம் 21ஆம் தேதி வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்டுள்­ளது. இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் இந்த இல்­லங்­க­ளுக்­கான வருகை மீண்­டும் தொடங்­கும்­போது, வரு­கை­யா­ளர்­கள் 'எஃப்இடி' பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

"விரைவு பரி­சோ­தனை நிலை­யங்­களை அமைக்க சில இல்­லங்­களுக்கு அதிக காலம் தேவைப்­படு­வ­தால், அது பின்­னொரு தேதி­யில்­தான் தொடங்­கப்­படும். சில இல்­லங்­கள் வரு­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­தலாம். பின்­னர் சோதனை செயல்­மு­றை­கள் தயா­ரா­கும்­போது வரு­கை­யா­ளர் எண்­ணிக்­கை­யைக் கூட்­ட­லாம்," என்று குழு கூறி­யது.