தனிமை உத்தரவில் இருந்த 29,000 பேர் தொடர்பான ஆய்வு

1 mins read
88fa4e15-cd17-4f48-a1fc-c343b58b12bd
-

சிங்­கப்­பூ­ரில் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றிய 29,000 பேர் தொடர்­பில் நடத்­தப்­பட்ட உள்­ளூர் ஆய்வு ஒன்­றில், கொவிட்-19க்கு எதி­ராக 79.1% பாது­காப்­பைத் தடுப்­பூசி தரு­வது கண்­ட­றி­யப்­பட்­டது.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் தொற்று ஏற்­படும் அபா­ய­மும் பின்­னர் அது கடு­மை­யான நோயாக மாறும் சாத்­தி­ய­மும் குறை­வ­தாக நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரும் அடங்­கு­வர். ஏப்­ரல் 11 முதல் சமூ­கத்­தில் பதி­வான கொவிட்-19 நோயா­ளி­களில் முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­ப­டாத 629 பேரில் 54 பேருக்­குக் கடு­மை­யான நோய் பாதிப்பு ஏற்­பட்­டது. முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 158 பேர், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டும் அவர்­களில் இரு­வர் மட்­டுமே கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளா­கி­னர்.